பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவிப்பு


புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவை மீதான நம்பிக்கையில்லா பிரேரணை பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் கரு ஜயசூரிய கூறியுள்ளார்.

இன்று வௌியிட்டுள்ள ஊடக அறிக்கையில் அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கடந்த 04ம் திகதி வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய இன்று காலை 10 மணிக்கு பாராளுமன்றம் கூடியதாகவும், இன்போது மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான அநுரகுமார திசாநாயக்க மறற்றும் விஜித ஹேரத் ஆகியோரால் அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரண சமர்பிக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அந்த பிரேரணை மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டதாகவும், அதன்படி பிரேரணைக்கு ஆதரவாக கிடைத்த பெரும்பான்மை வாக்குகளுக்கமைய பிரேரணை நிறைவேற்றப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அத்துடன், நம்பிக்கையில்லாப் பிரேரணையின் பிரதி மற்றும் அண்மையில் நிமிக்கப்பட்ட பிரதமர் மற்றும் அமைச்சரவை அரசியலமைப்புக்கு எதிரானது என்று 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒப்பமிட்ட கடிதம் என்பன ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -