சர்வதேச நாடுகளின் அபகீர்த்திக்கு அரசாங்கம் ஆளாகியுள்ளது.

நிசார் எம் நிஷாம்-

சுய நலனுக்கு சனநாயகம் பலியா சுயநல அரசியலுக்காக நாட்டின் ஜனநாயகத்துக்கு சாவுமணி அடிக்கப்பட்டு சர்வதேச நாடுகளின் அபகீர்த்திக்கும் அரசாங்கம் ஆளாகியுள்ளது. 

பதவி பட்டம் அதிகாரம் ஆகியவற்றை வாழ்நாளில் தொடர்ந்தும் தம் வசம் வைத்திருக்க வேண்டுமென்ற நப்பாசையில் நிறைவேற்று அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் ஜனாதிபதி அவர்களின் செயற்பாடு உள்நாட்டில் மாத்திரமின்றி சர்வதேச ரீதியிலும் எதிர்ப்பலைகளை தோற்றுவித்துள்ளது. 

ரணில் விக்ரமசிங்கவுடன் செயலாற்ற முடியாது என்பதற்காக பிரதமர் பதவியில் இருந்து நீக்கியதை ஏற்றுக் கொண்டாலும் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை காண்பித்து நம்பிக்கையில்லா பிரேரணையில் தோல்வியடைந்த பின்னர் அமைச்சரவையை மாற்றியமைக்காததை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. 

நம்பிக்கையில்லா பிரேரணையில் தோல்வியடைந்தால் ஒர் அமைச்சரவை உடனடியாக பதவிவிலக வேண்டும். மாற்று அமைச்சரவையை ஜனாதிபதி நியமித்து நாட்டின் ஜனநாயக உரிமையை பாதுகாக்க வேண்டும். 

நிறைவேற்று ஜனாதிபதிக்கு காணப்படும் எல்லையில்லா அதிகாரம் தற்போது பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தும் உரிய தீர்மானம் எடுக்காமல் இருப்பது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகவே நோக்கப்படுகிறது. 

தனக்கு விருப்பம் இல்லை என்பதற்காகவே ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்க வில்லை என்ற ஜனாதிபதியின் கருத்து நிறைவேற்று அதிகாரத்தின் உச்ச பயன்பாடு என்பதையும் தான் கருதும் எதனையும் சர்வாதிகாரி போல செய்யும் சக்தி காணப்படுகிறது என்பதையும் மறைமுகமாக குறிப்பிட விரும்புகிறாறா? பாராளுமன்ற கலைப்பினால் தான் ஒரு சர்வாதிகாரி என்பதை உலகுக்கு காட்ட முயற்சித்து மூக்குடைப்பட்டிருக்கும் ஜனாதிபதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தும் அமைச்சரவையை கலைக்கமல் இருப்பதும் சர்வாதிகார ஆட்சிக்கு வழிவகுக்கும் காரணங்களாக வர்ணிக்கப்படுகிறது.

 சில வேளை தேர்தல் ஒன்றில் மீண்டும் ரணில் விக்ரமசிங்க வெற்றி பெற்றால் ஜனாதிக்கு மீண்டும் பாராளுமன்றத்தை கலைக முடியுமா அல்லது பிரதமராக நியமிக்க முடியாது என்று கூறமுடியுமா? எப்பொழுது பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்ததோ அன்றே முழு அமைச்சரவையும் பதவியிழந்துவிட்டது. இதற்கும் மேலாக தற்போது மீண்டும் எம்பிக்களை விலைக்கு வாங்கும் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றது. நாடாளுமன்றத்தில் நிதி தொடர்பான பிரேரணையை ஐதேமு முன்வைத்துள்ளது. இத்ற்கான வாக்கெடுப்பு 29ஆம் திகதி நடைபெறவுள்ளது. அதனை வெற்றிபெற ஆளும் தரப்பு எம்பிக்களை எவ்வளவு கொடுத்தாவது வாங்கிவிட முயற்சி செய்து வருகிறது.

 இவை ஆளும் தரப்புக்கு சாதாரண விடயமாக காணப்பட்டாலும் மக்கள் மத்தியில் செல்வாக்கு இழந்த அரசியல்வாதியாக மாறியுள்ளதை மறந்து அதிகார மமதையில் செயற்படுவதை காண முடிகிறது.​​​​​ ஆகவே நாட்டில் இடம்பெறும் ஜனநாயக விழுமியங்களுக்கு சாவுமணி அடிக்கப்படும் நிறைவேற்று ஜனாதிபதி முறையை இல்லாமலாக்கி தற்போதைய ஜனாதிபதியின் ஆணவ அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க பொதுமக்கள் தமது வாக்குகள் மூலம் பதிலலிக்க தயாராக வேண்டும். 

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -