தன் மீது பெற்றோல் குண்டு மற்றும் எசிட் வீசுவதற்கு முயற்சிக்கப்பட்டுள்ளதாக சபையில் முறையிட்ட வடிவேல் சுரேஷ்


ன் மீது பெற்றோல் குண்டு மற்றும் எசிட் வீசுவதற்கு முயற்சிக்கப்பட்டுள்ளதாக ஐ.தே.க எம்.பியான வடிவேல் சுரேஷ் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நான் ஞாயிற்றுக்கிழமை பதுளையில் நடைபெற்ற கட்சியின் கூட்டத்திற்கு சென்றிருந்த போது வெளியாட்கள் அதற்குள் இருந்துக்கொண்டு என்னை அச்சுறுத்தியுள்ளனர். சபையில் மிளகாய் தூளை வீசுகின்றார்கள்.

பதுளைக்கு சென்றால் என் மீது பெற்றோல் குண்டு மற்றும் எசிட் வீச முயற்சிக்கின்றனர். சிறுபான்மை மக்களை பிரதிநிதித்துவப்படுத்தியே நான் பாராளுமன்றத்தில் இருக்கின்றேன். இது எமது மக்களின் ஜனநாயகத்தை மீறும் செயலாகும். இது தொடர்பாக நான் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த போதும் அந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நடவடிக்கையெடுக்கவில்லை.

அவருக்கு பதவி உயர்வும் தற்போது வழங்கப்பட்டுள்ளது. இது மக்கள் பிரதிநிதியொருவரின் சிறப்புரிமையை மீறும் செயற்பாடு என்பதனால் இது தொடர்பாக நடவடிக்கையெடுக்க வேண்டுமென சபாநாயகரை கேட்டுக்கொள்கின்றேன். என அவர் தெரிவித்துள்ளார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -