இன்று முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயத்தை மேற்க்கொண்ட வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மீள்குடியேற்றம்,புனர்வாழ்வு வடக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சருமான கெளரவ காதர் மஸ்தான் அவர்கள் தனது நிதி ஒதுக்கீட்டில் இடம்பெற்று வரும் பல்வேறுபட்ட அபிவிருத்தித் திட்டங்களை பார்வையிட்டதுடன் மக்களால் முன்வைக்கப்பட்ட பல்வேறுபட்ட பிரச்சினைகளையும் தீர்த்து வைத்தார்.
முள்ளிவாய்க்கால் கிழக்கு, முள்ளிவாய்க்கால் மேற்கு,புதுக்குடியிருப்பு கோணாவில்,வள்ளிக்குளம்,குமிழமுனை ஆறுமுகத்தான்குளம் ஆகிய இடங்களில் இடம்பெற்று வரும் அபிவிருத்திகளை பார்வையிட்டதுடன் அபிவிருத்தி பணிகளின் முன்னேற்றங்களை கண்டறிந்து கொண்டதுடன் அவற்றை விரைவுபடுத்துமாறு அதிகாரிகளுக்கு கட்டளை பிறப்பித்தார்.
மேலும் மக்களால் முன்வைக்கப்பட்ட பல்வேறு தேவைப்பாடுகளையும் உடன் தீர்த்து வைத்ததுடன் சில விடயங்களை விரைவில் செய்து தருவதாகவும் உறுதியளித்தார்.
யுத்தத்தால் படுமோசமாக பாதிக்கப்பட்ட மேற்படி பிரதேச மக்களின் துயரங்களை போக்குவதற்கு கெளரவ பிரதி அமைச்சர் எடுத்து வரும் முயற்சிகளுக்கு அப்பிரதேச மக்கள் தமது வாழ்த்துக்களையும் நன்றிகளையும் இன்றைய நிகழ்வில் நேரில் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -