ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்குடாத் தொகுதி அமைப்பாளர் பதவி தொடர்பாக அண்மைக்காலமாக சர்சைகள் இடம் பெற்று வருகின்றேன.
கல்குடா தொகுதியில் பிரதி அமைச்சர் அமீர் அலி அவர்கள் முஸ்லிம் காங்கிரஸில் இருந்து பிரிந்து சென்ற பின் இந்த கட்சி படிப்படியாக பலம் இழந்து போனது, இந்த சந்தர்ப்பங்களை பயன்படுத்திக் கொண்ட மு.கா. வெளியூர் அரசியல்வாதிகள் தங்களுடைய ஏஜன்டுகளை நியமித்து அவர்களினூடாக அப்பாவி போராளிகளை ஏமாற்றி வாக்குகளை சூறையாடி வெற்றி பெற்று வந்தார்கள்.
இவ்வாறு கல்குடா தொகுதியை இரண்டாக பிரித்து, மு.கா. கட்சி போராளிகளை பகடைகாயாக பயன்படுத்துவதற்கு கால காலத்திற்கும் சிலர் கல்குடாவில் செயற்படுவார்கள்.
மு.கா.கட்சியின் அமைப்பாளர்கள்,உயர்பீட உறுப்பினர்கள் கல்குடாவில் இருந்த போதும் சமூகமோ,போராளிகளோ எந்த வித பயனையும் அடையவில்லை, இறுதியில் அவர்கள் கட்சி மாறி போவதும், ஒவ்வொரு தேர்தல் வரும் போதும் புதியவர்களை மு.கா.தலைவர் அறிமுகப்படுத்துவதுமாக போய்க் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம் கடந்த பொது தேர்தலில் கணக்காளர் றியாழை அறிமுகம் செய்து கட்சி பொறுப்பையும் கையளித்தார்.
றியாழ் கல்குடா அமைப்பாளராக, கட்சியின் உயர்பீட உறுப்பினராகவும் நியமனம் பெற்று குறுகிய காலத்திற்குள் மக்களின் மனங்களை வென்று கட்சியை வளர்ச்சி பாதைக்கு இட்டுச் சென்றார்,அத்தோடு போராளிகளின் எதிர்பார்பான அபிவிருத்திகளையும் மேற்கொண்டது மாத்திரமின்றி தனது சொந்த வருமானத்திலும் சமூகத்திற்கும்,கட்சி வளர்ச்சிக்கும் செலவு செய்தார தவீர வெளியூர் அரசியல்வாதிக்கு கூஜா தூக்கி வயிறு வளர்க்க முற்படவில்லை ஏன் என்றால் அவர் நல்ல குடும்பத்தில் பிறந்து இந்த இந்த சமூகத்தை நேசிக்கும் நல்ல மனிதர் என்பதால்.
இவ்வாறு மு.கா. இன் வளர்சியை கண்டு உள்ளூர் அரசியல்வாதி மாத்திரமின்றி இந்த கட்சிக்குள் இருக்கும் கடந்த காலங்களில் இந்த பிரதேச கட்சி போராளிகளின் வாக்குகளால் வெற்றிபெற்ற வெளியூர் அரசியல்வாதிக்கும் பயம் பிடித்துவிட்டது.
இந்த பயம் கடந்த உள்ளூராட்சி தேர்தலுடன் மேலும் அதிகரித்து, அதாவது ஊரில் பிரதி அமைச்சரை எதிர்த்து சுயற்சை குழுவில் வேற்பாளர்கள் போட்டு அவர்களை வெல்லவைப்பதற்காக கடும் பாடுபட்டு வெற்றியும் ஈட்டிக் காட்டினார்.
இதனால் கல்குடாவில் கட்சி பலம் பெற்று றியாழ் பலம் பெற்றால் எதிர் வரும் மாகாண சபை தேர்தலில் கல்குடாவில் மு.கா. பிரதிநிதி வருவது உறுதியாகிவிடும் அப்படி நடந்தால் தான் மாகாண சபை செல்லமுடியாத சூழ்நிலை ஏற்படலாம் என்று உணர்ந்த வெளியூர் அரசியல்வாதி கடந்த மாகாண சபை தேர்தலில் தனக்கு கல்குடாவில் வேலை செய்த ஏஜன்டுகளையும்,சில பிரதேச சபை உறுப்பினர்களையும் சந்தித்து அவர்களுக்கு ஆசபாசங்களை ஏற்படுத்தி, அடுத்த முதல்வர் தான்தான் என்று கூறி அவர்களை நம்பவைத்து றியாழுக்கு எதிராக திருப்பிவிட்டார், இத்தனைக்கும் கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கல்குடாவில் கட்சி வெல்வதற்கோ, இந்த உறுப்பினர்களின் வெற்றியிலோ எந்தவித பங்களிப்பும் செய்யாதவர் இந்த வெளியூர் அரசியல்வாதி என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது பல முறை கல்குடாவின் மு.கா. சில பிரதேச சபை உறுப்பினர்களும்,தோல்வி கண்ட வேற்பாளர் சிலரும் இந்த வெளியூர் அரசியல்வாதியை சந்தித்து வந்தார்கள் அதன் வெளிப்பாடாக கல்குடாவிற்கு புதிய அமைப்பாளர் வேண்டும் அதற்கு இவர்கள் சொல்லும் காரணம் அமைப்பாளர் ஊரில் இருந்து முழு நேர அரசியல் செய்யவேண்டுமாம் ஆம் இவர்கள் சொல்வது போல் அமைப்பாளர் எந்த தொழிலும் இல்லாது ஊரில் இருந்து அரசியல் செய்வது என்றால் கடந்த கால அமைப்பாளர்களின் நிலைதான் வரும், பிறகு வெளியூர்க்கு கூஜா தூக்கி ஊரின் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் ஆக்கவேண்டும்.
தற்போது கல்குடாவிற்கு வந்த இந்த கட்சியின் வெளியூர் அரசியல்வாதி கட்சி வளர்ச்சி,அபிவிருத்தி தொடர்பாக பேசிட்டு போயிருக்கார் இத்தனைக்கும் எந்த அதிகாரமுமில்லை, எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலை எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்.
எனவே கல்குடா மக்கள் கவனமாக இருக்க வேண்டும் இந்த உறுப்பினர்களும், கூஜா தூக்கிகளும் சேர்ந்து எமது பிரதேச மாகாண சபை உறுப்புரிமையை தங்களின் சுயநலன்களுக்காக காட்டிக் கொடுத்துவிடுவார்கள்.
நிலமை இவ்வாறு தொடர்ந்தால் ஊரின் மாகாண சபை பிரதிநிதித்துவத்தை பாதுகாக்க பிரதி அமைச்சர் ஒரு துடப்பங்கட்டையை போட்டாலும் எல்லோருமாக வாக்களிக்கவேண்டிய நிலை ஏற்படும்.
"வெளியூர் அழகனை விட உள்ளூர் முடவன் சிறந்தவன்"
மக்களே அவதானம், இதனை எல்லோருக்கும் விழிப்புணர்வுக்காக பகிர்ந்து கொள்ளவும்.