முஹாசபா வலையமைப்பின் பெண்கள் பிரிவான "அந் நிஸா" பிரிவின் ஏற்பாட்டில் 10.08.2018 வெள்ளிக்கிழமை காங்கேயனோடை முகைதீன் ஜும் ஆ பள்ளிவாயலில் " சிறுவர் துஷ்பிரயோகமும், சீரழிந்து போகும் ஒழுக்க விழுமியங்களும் "
எனும் தலைப்பில் பெண்களுக்கான கருத்துரை நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் விஷேட வைத்திய அதிகாரியும்,மற்றும் தோல் நோய்,மற்றும் தொற்று நோய் தடுப்புப் பிரிவின் வைத்தியர் அலிமா அப்துர்ரஹ்மான் (MBBS.SL) விரிவுரையாளராக கலந்துகொண்டதுடன் நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இது போன்ற விழிப்புணர்வு நிகழ்வுகளை தொடர்ச்சியாக நடத்துவதற்கு முஹாசபா வலையமைப்பு தீர்மானித்துள்ளது..