சாய்ந்தமருது சமுர்த்தி வங்கியில் இவ்வருட புத்தாண்டு கொடுக்கல் வாங்கலில் அதிக சேமிப்பு வைப்புக்களை வைப்புச் செய்த வாடிக்கையாளர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு வங்கியின் முகாமையாளர் எம்.எஸ்.எம்.மனாஸ் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம்.றிகாஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வாடிக்கையாளர்களுக்கு பரிசில்களை வழங்கி வைத்தார்.
இதில் சமுர்;த்தி தலைமை முகாமையாளர் ஏ.சீ.ஏ.நஜீம், சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கிச் சங்க முகாமையாளர் எம்.ஜூனைதா, உதவி சமுர்த்தி முகாமையாளர் ஏ.எம்.எம்.றியாத் உள்ளிட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், வங்கி வாடிக்கையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகளினால் வாடிக்கையாளர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.