பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலத்தில் மாணவர்களை வழியனுப்பும் நிகழ்வு

எம்.ஐ.எம்.அஸ்ஹர்-
ட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் ( தேசிய பாடசாலை) களுவாஞ்சிக்குடி உயர்தர சிரேஸ்ட மாணவர்களால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இவ்வருடம் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள க.பொ.த.உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களை பாராட்டி வாழ்த்தி வழியனுப்பும் நிகழ்வு ( 2 ) பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
பாடசாலை அதிபர் , பிரதி அதிபர்கள் , பகுதித் தலைவர்கள் , ஆசிரியர்கள் மற்றும் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் உயர்தர சிரேஸ்ட மாணவர்களால் வரவேற்கப்பட்டதுடன் அவர்களுக்கு பகற்போசனமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் பாடசாலை அதிபர் , பிரதி அதிபர்கள் , பகுதித் தலைவர்கள் , ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.











இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -