டான் ரோஷன் சஞ்சய்யா கத்தாரில் இயங்கும் ஸ்டாஃபோர்ட் ஶ்ரீலங்கா பாடசாலையின் கற்றலின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தூதுவர் HE ASP லியனகெ தெரிவித்துள்ளார்.
இதன் போது பாடசாலை மாணவர்களின் பெற்றோருடன் கூடிய 10 உறுப்பினர்கள் கொண்ட குழுவும் பாடசாலை விவகாரங்களை முன்னேடுப்பதற்காகவும் புதிய தலைவருக்கு உதவுவதற்காக அமைக்கப்பட்டுள்ளன.
இலங்கை தூதரகத்தின் படி,பாடசாலையின் முன்னாள் தலைவரான சினெஷெர் சில்வெஸ்டர் பொன்சேகா, பாடசாலை நிதிகளை தவறாகப் பயன்படுத்துவது சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் காரனமாகவே நீக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகள் நடைபெற்று வருகிறதாகவும் இலங்கை தூதுவர் HE ASP லியனகெ தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், பள்ளியின் முதன்மை ஆசிரியர் உட்பட ஊழியர்கள் அனைவரும் நீக்கப்படமாட்டார்கள் என்று இலங்கை தூதர் Hஏ ஆஸ்P லியனகெ தீர்ப்பளித்தார், பள்ளியில் கல்வி தரத்தை உயர்த்துவதற்காக கோடை விடுமுறையின் பின்னர் மேலும் ஊழியர்கள் (ஆகஸ்டில்) பள்ளியில் சேர்ந்துகொள்ளப்படுவர் என்றும் குறிப்பிட்டார்.
அல் துமாமா பகுதியில் புதிய பள்ளி கட்டடம் 60 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு இன்னும் மூன்று மாதங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
தற்பொழுது, ஸ்டாஃபோர்ட் ஶ்ரீலங்கா பாடசாலையில் 1,400 மாணவ மாணவிகள் உள்ளனர். புதிய வளாகத்தை ஆரம்பித்ததன் பின் 2,400 மாணவர்கள் எதிர்பார்க்கப்படுகின்றதாகவும் இலங்கை தூதுவர் HE ASP லியனகெ தெரிவித்துள்ளார்.