“உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்”எனும் மகுட வாசகத்திற்கு அமைவாக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் குருதி தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்யும் நோக்கில் அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரி 2022/2024 ஆம் பிரிவு ஆசிரிய பயிலுனர்களினாலும், கல்வி, கல்விசாரா உத்தியோகத்தர்களினாலும் இரத்தானம் வழங்கும் நிகழ்வு கல்லூரியின் பீடாதிபதி சட்டத்தரணி கி.புண்ணியமூர்த்தி தலைமையில் இன்று (16) கல்லூரியில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கல்லூரியின் நிதி மற்றும் நிருவாகத்திற்கு பொறுப்பான உப பீடாதிபதி எம்.சி. ஜூனையிட் , கல்வி, கல்வி சாரா உத்தியோகத்தர்கள், இரத்தவங்கிக்கு பொறுப்பான வைத்தியர் ஏ. எல். எம். றுஸ்தான், ஏ. ஏ.எப். மஸீறா மற்றும் தாதி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment