இலங்கையை பொறுத்தவரை இது விடயத்தை செயற்படுத்தும் அதிகாரம் எம்மிடம் இல்லை என்பதால் நாளை நோன்புப்பெருநாளை எடுப்பதா என்ற முடிவுக்கு இன்னமும் நாம் வரவில்லை. ஆனாலும் ஷவ்வால் பிறை காணப்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளதால் யாரும் நாளை நோன்பு வைக்க வேண்டாம் என நாம் இலங்கை முஸ்லிம்களை கேட்டுக்கொள்கிறோம்.
அதே வேளை பெருநாள் என்பது முஸ்லிம்கள் சேர்ந்து எடுப்பதே பெருநாள் என முஹம்மது நபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம் சொல்லியுள்ளதால் நாளை நாம் பெருநாள் எடுக்க முடியாமல் போனாலும் நாளை மறுநாள் பெருநாள் எடுக்க முடியும்.
ஆகவே நாளை நோன்பு வைப்பதற்கு ஹராமான தினம் என்பதால் நாளை நோன்பு இல்லை என்ற செய்தியை இப்போதைக்கு நாம் தெரியப்படுத்துகிறோம்.
நாளை பெருநாள் கொண்டாடுவதா இல்லையா என்பதை பற்றி இலங்கை முஸ்லிம்கள் சுயமாக முடிவெடுக்க முடியும். அது பற்றிய தகவல்கள் சிறிது தாமதமாக வெளிவரலாம் இன்ஷால்லாஹ்.
முபாறக் அப்துல் மஜீத் மௌலவி
தலைவர்
உலமா கட்சி