காரைதீவு பிரதேச வைத்தியசாலை (26)புதன் முதல் கால வரைறையின்றி பூட்டப்பட்டுள்ளது. இதனால் நோயாளர்கள் வேறு வைத்தியசாலைகளுக்குச்செல்ல வேண்டி நேரிட்டது.
இதனை பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் ஜீவராணி சிவசுப்பிரமணியம்
உறுதிப்படுத்தினார். நேற்று எந்தநோயாளருக்கும் சிகிச்சை அளிக்கப்படவில்லை. ஆனால் வைத்தியர்கள்
தொடக்கம் அனைத்து ஊழியர்களும் வைத்தியசாலையில்
சமுகமளித்திருந்ததைக்காணமுடிந்தது.
நேற்று (26) செவ்வாய்க்கிழமை அங்கு இடம்பெற்ற சம்பவமொன்றின் எதிரொலியாகவே வைத்தியசாலை பூட்டப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இது தொடர்பாக வைத்தியஅதிகாரி டாக்டர் ஜீவாவிடம் கேட்டபோது:
முன்னாள் வைத்தியத்துறைப்பேராசிரியர் டாக்டர் வரகுணம் எமக்கு அன்பளிப்பாக வழங்கிய வைத்தியசாலைக்குச்சொந்தமான பிரதானவீதிக்கருகாமையிலுள்ள காணி
தற்காலிகமாக மைதானமாக பயன்படுத்தப்பட்டுவருகின்றது.
அங்கு எமது சுகாதாரத் திணைக்கள ஊழியர்களுக்கிடையிலான விளையாட்டுநிகழ்வை
நடாத்த பிராந்திய சுகாதார சேவைப்பணிப்பாளரின் எழுத்துமூல
வேண்டுகோளுக்கமைவாக 4தினங்கள் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டது.
ஊழியர்கள் விளையாடிக்கொண்டிருக்கையில் அங்கு வழமையாக விளையாடும்
ஊர்ச்சிறுவர்கள் தாமும் இதே மைதானத்தில் விளையாடவேண்டும் என்று
சர்ச்சையைக்கிளப்பினர்.
அவர்களிடம் நான் உள்ளவிளக்கத்தை தெளிவாக்சொன்னேன். அவர்கள் போய்விட்டார்கள்.
சிலமணிநேரத்துள் மற்றுமொரு கும்பல்வந்து தாறுமாறாக எம்மிடம்
கேள்வியெழுப்பி ஆர்ப்பாட்டத்திலிடுபட ஆயத்தமானது. விளக்கத்தை
அவர்களிடமும் நானும் சக வைத்தியர்களும் சொன்னோம். அவர்கள் கேட்பதாயில்லை.
வேறு வழியின்றி வைத்தியசாலையைப பூட்டுவதற்கு முடிவெடுத்து உரிய
தலைமைகளிடம் அறிவித்துவிட்டு நாம் அன்றிரவு வெளியேறினோம்.
இதற்கொரு தீர்வு எட்டும்வரை காலவரையறையின்றி நாம்
நோயாளிகளைப்பார்ப்பதில்லை என தீர்மானித்துள்ளோம். என்றார்.
நோயாளிகளைப்பார்ப்பதில்லை என தீர்மானித்துள்ளோம். என்றார்.