பெருநாளின் பின்னால்..(கவிதை)


பெருநாளின் பின்னால்..
+++++++++++++++++++
Mohamed Nizous

கேட்ட பயான் என்ன
போட்ட தொப்பி என்ன
ஷவ்வால் பிறை வானில் தோன்ற
வெளவால் போல் தலை கீழ் என்ன

ரமழானிலே பக்தி
ராவையிலே தஹஜ்ஜத்
அமல்கள் செய்த சில பேர்
அடுத்த பக்கம் பாய்வார்
எடுத்த பயிற்சி மறப்பார்.

நாடியிலே தாடி
நல்லா பக்தி கூடி
பெரு நாள் இரவு சலூனில்
ஒரே வழியாய் வழிப்பார்
நபி வழியை மறப்பார்

பெரு நாளில் கூடி
பியர் அடிக்கும் போதே
பயம் பக்தி எல்லாம்
பஞ்சாகிக் பறக்கும்
பாவம் மனதை நிறைக்கும்

முன் வரியைப் பிடித்து
முப்பது நாள் தொழுதோர்
பெரு நாளின் பின்னால்
முக வரியைக் காணோம்
முக வரியைக் காணோம்

கஞ்சிக் கோப்பை கழுவி
கவிழ்த்து வைக்கும் போதே
பக்தியையும் கவிழ்த்து
பழைய படி திரிவார்
பழைய படி திரிவார்.

ரமழானில் இருந்த
ரஹ்மான்தான் தொடர்ந்தும்
இருக்கின்றான் ஆனால்
இவர் அதனை மறப்பார்
இஷ்டத்துக்கு நடப்பார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -