ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத்தினரின் வெலிகம கிளைக்கு இன்று (05) உளவுத்துறையினர் வருகை தந்து திடீர் விசாரணை நடத்தியதாக ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத்தினரின் வெலிகம கிளை (மதுராப்புரயில் இயங்குவது) தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத்தினருடன் முறுகலில் உள்ள ஒரு சிலரே, ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத்தின் வெலிகம கிளையினர் இனவாத இயக்கம் என்று கொழும்பு உளவுத்துறையினருக்குத் தெரிவித்ததைத் தொடர்ந்தே உளவுத்துறையினர் திடீர் விசயம் செய்து, பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.
உளவுத்துறையினரின் பரிசோதனைக்குஎஸ்எல்ரீஜே வெலிகம கிளையினர் முழு ஒத்துழைப்பு நல்கியுள்ளர். விசாரணையில் தகவலில் உண்மைத் தன்மை இல்லையென்பதை உளவுத்துறையினருக்குத் தெளிவாகியுள்ளதோடு, அவ்வமைப்பின் உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்தன் மூலம், அவர்களின் சமூகப் பணிகள் பற்றியும் உளவுத்துறையினர் தெரிந்து கொண்டுள்ளனர்.
எதுஎவ்வாறாயினும், விசாரணைக்காக வருகை தந்த உளவுத்துறையினர் ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத்தினரின் சேவைகைளைப் பாராட்டி, மேலும் இவ்வாறான அரும்பணிகளைச் செய்வதற்கு ஆசியும் வழங்கிச் சென்றுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -