கிராமிய பொருளாதார அலுவல்கள், நீர்வள மீன்பிடி பிரதியமைச்சர் கெளரவ எம்.எஸ்.எம்.அமீர் அலி அவர்களின் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் நிதியிலிருந்து ஓட்டமாவடி B/2 கிராம சேவகர் பிரிவிலுள்ள தாருஸ்ஸலாம் வீதியும் வாழைச்சேனை சேகு இப்றாஹீம் வீதியும் வடிகான் இடப்பட்டு புனரமைப்புச் செய்யப்படவுள்ளது.
மிக நீண்ட காலமாக செப்பனிப்படாமல் சேதமடைந்து குன்றும் குழியுமாகக் காணப்படும் குறித்தி வீதி மழைக்காலங்களில் நீர் நிரம்பி பொது மக்களின் போக்குவரத்துக்கு அசெளகரியங்களை ஏற்படுத்தி வந்தது.
இதனைக் கருத்திற்கொண்ட பிரதியமைச்சர் அமீர் அலி முதற்கட்டமாக இரு வீதிகளுக்கும் வடிகான் அமைப்பதற்கு தலா இரண்டு மில்லியன் ரூபாய்களை தனது கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்துள்ளார்.
குறித்த வீதிகள் செப்பனிப்பட வேண்டுமென்ற கோரிக்கை நீண்ட காலமாக முன்வைக்கப்பட்டு வந்த நிலையில் பிரதியமைச்சர் அமீர் அலி அவர்கள் வடிகானை அமைப்பதற்கான நிதியை ஒதுக்கியுள்ளதுடன், அடுத்த கட்டமாக வீதியைப் புனரமைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -