எம்.ரீ. ஹைதர் அலி-
சமூக விஞ்ஞான போட்டிகளில் தேசிய ரீதியில் சாதனை படைத்த மாணவிகள் இருவரின் மூன்றாண்டுகளுக்கான கல்விக்கான செலவை தனது சொந்த நிதியில் இருந்து வழங்கி வைப்பதாக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் காத்தான்குடி நகர சபையின் உறுப்பினருமான பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார்.
காஞ்சிரங்குடா காமாட்சி வித்தியாலயம் சார்பாக சமூக, விஞ்ஞான போட்டிகளில் பங்குபற்றி சாதனை படைத்த மாணவிகள் மற்றும் அவர்களை பயிற்ருவித்த ஆசிரியர்களை கௌரவிக்கும் வைபவம் ஒன்று அண்மையில் காஞ்சிரங்குடா காமாட்சி வித்தியாலயத்தில் நடைபெற்றது.
பாடசாலையின் அதிபர் சுந்தரமோகன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான பொறியியலாளர் ஷிப்லி பாறூக், மண்முனை மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் அகிலா கனகசூரியம், மண்முனை மேற்கு பிரதேச சபை உறுப்பினர் விஷ்ணுகாந்தன், ஓய்வு பெற்ற அதிபர் அகிலேஸ்வரன் ஆகிய அதிதிகள் உள்ளிட்ட பாடசாலை ஆசிரியர்கள், நிர்வாக உறுப்பினர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது உரையாற்றுகையிலேயே அப்பாடசாலை சார்பாக சமூக விஞ்ஞான போட்டிகளில் பகுபற்றி சாதனை படைத்த தரம் 9இல் கல்வி பயிலும் இரு மாணவிகளுக்கும் அவர்களின் கா.பொ.த. சாதாரண தரம் வரையிலான கல்விச் செலவினை தாம் தனது சொந்த நிதியிலிருந்து வழங்குவதாக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான பொறியியலாளர் ஷிப்லி பாறூக் பொறுப்பேற்றுக்கொண்டார். இதன்போது அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்
அதிகளவான வளங்களைக்கொண்ட பாடசாலைகளுக்கு மத்தியில் இத்தகைய பின்தங்கிய பிரதேச பாடசாலை ஒன்றினுடைய மாணவிகள் தேசிய ரீதியில் சாதனைகளை நிகழ்த்தியுள்ளமைமையானது உண்மையிலேயே மிகவும் பாராட்டுக்குரிய விடயமாகும். இருப்பினும் தமது குடும்ப பொருளாதார சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இத்தகைய அதிகமாக மாணவர்கள் தமது கல்வியினை உரியமுறையில் தொடரமுடியாமல் போன்கின்ற அதிகமான சந்தர்ப்பங்களை எம்மால் அவதானிக்க முடிகின்றது.
எனவே இத்தகைய மாணவர்களை ஊக்கப்படுத்தி, சரியான வழிகாட்டுதல்களையும் எங்களால் முடியுமான உதவிகளையும் பெற்றுக்கொடுக்கின்ற போது எதிர்காலத்தில் அவர்களை சிறந்த கல்வியியலாளர்களாக உருவாக்க முடியும் என்பதில் எத்தகைய சந்தேகங்களும் கிடையாது.
ஆகவேதான் நாங்கள் இத்தகைய பின்தங்கிய, வளப்பற்றாக்குறைகள் மிக்க பிரதேச பாடசாலைகளை மையப்படுத்தி அதிகளவான வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்திவருவதோடு எதிர்காலத்திலும் எங்களால் முடியுமான அனைத்துவிதமான உதவிகளையும் பெற்றுக்கொடுக்கவுள்ளோம்.
மேலும் தேசிய மட்டத்தில் இத்தகைய சாதனைகளை நிகழ்த்தி இந்த பிரதேசத்திற்கு மாத்திரமன்றி எமது முழு மாவட்டத்திற்கும் பெருமைகளை பெற்றுக்கொடுத்த இந்த மாணவிகளையும் அவர்களின் வெற்றிக்காக உழைத்த ஆசிரியர்களையும் கௌரவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைவதோடு அவர்கள் மேலும் பல்வேறு சாதனைகளைப்புரிய வாழ்த்துகின்றேன் எனவும் தெரிவித்தார்.
சமூக விஞ்ஞான போட்டிகளில் தேசிய ரீதியில் சாதனை படைத்த மாணவிகள் இருவரின் மூன்றாண்டுகளுக்கான கல்விக்கான செலவை தனது சொந்த நிதியில் இருந்து வழங்கி வைப்பதாக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் காத்தான்குடி நகர சபையின் உறுப்பினருமான பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார்.
காஞ்சிரங்குடா காமாட்சி வித்தியாலயம் சார்பாக சமூக, விஞ்ஞான போட்டிகளில் பங்குபற்றி சாதனை படைத்த மாணவிகள் மற்றும் அவர்களை பயிற்ருவித்த ஆசிரியர்களை கௌரவிக்கும் வைபவம் ஒன்று அண்மையில் காஞ்சிரங்குடா காமாட்சி வித்தியாலயத்தில் நடைபெற்றது.
பாடசாலையின் அதிபர் சுந்தரமோகன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான பொறியியலாளர் ஷிப்லி பாறூக், மண்முனை மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் அகிலா கனகசூரியம், மண்முனை மேற்கு பிரதேச சபை உறுப்பினர் விஷ்ணுகாந்தன், ஓய்வு பெற்ற அதிபர் அகிலேஸ்வரன் ஆகிய அதிதிகள் உள்ளிட்ட பாடசாலை ஆசிரியர்கள், நிர்வாக உறுப்பினர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது உரையாற்றுகையிலேயே அப்பாடசாலை சார்பாக சமூக விஞ்ஞான போட்டிகளில் பகுபற்றி சாதனை படைத்த தரம் 9இல் கல்வி பயிலும் இரு மாணவிகளுக்கும் அவர்களின் கா.பொ.த. சாதாரண தரம் வரையிலான கல்விச் செலவினை தாம் தனது சொந்த நிதியிலிருந்து வழங்குவதாக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான பொறியியலாளர் ஷிப்லி பாறூக் பொறுப்பேற்றுக்கொண்டார். இதன்போது அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்
அதிகளவான வளங்களைக்கொண்ட பாடசாலைகளுக்கு மத்தியில் இத்தகைய பின்தங்கிய பிரதேச பாடசாலை ஒன்றினுடைய மாணவிகள் தேசிய ரீதியில் சாதனைகளை நிகழ்த்தியுள்ளமைமையானது உண்மையிலேயே மிகவும் பாராட்டுக்குரிய விடயமாகும். இருப்பினும் தமது குடும்ப பொருளாதார சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இத்தகைய அதிகமாக மாணவர்கள் தமது கல்வியினை உரியமுறையில் தொடரமுடியாமல் போன்கின்ற அதிகமான சந்தர்ப்பங்களை எம்மால் அவதானிக்க முடிகின்றது.
எனவே இத்தகைய மாணவர்களை ஊக்கப்படுத்தி, சரியான வழிகாட்டுதல்களையும் எங்களால் முடியுமான உதவிகளையும் பெற்றுக்கொடுக்கின்ற போது எதிர்காலத்தில் அவர்களை சிறந்த கல்வியியலாளர்களாக உருவாக்க முடியும் என்பதில் எத்தகைய சந்தேகங்களும் கிடையாது.
ஆகவேதான் நாங்கள் இத்தகைய பின்தங்கிய, வளப்பற்றாக்குறைகள் மிக்க பிரதேச பாடசாலைகளை மையப்படுத்தி அதிகளவான வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்திவருவதோடு எதிர்காலத்திலும் எங்களால் முடியுமான அனைத்துவிதமான உதவிகளையும் பெற்றுக்கொடுக்கவுள்ளோம்.
மேலும் தேசிய மட்டத்தில் இத்தகைய சாதனைகளை நிகழ்த்தி இந்த பிரதேசத்திற்கு மாத்திரமன்றி எமது முழு மாவட்டத்திற்கும் பெருமைகளை பெற்றுக்கொடுத்த இந்த மாணவிகளையும் அவர்களின் வெற்றிக்காக உழைத்த ஆசிரியர்களையும் கௌரவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைவதோடு அவர்கள் மேலும் பல்வேறு சாதனைகளைப்புரிய வாழ்த்துகின்றேன் எனவும் தெரிவித்தார்.