பஸ் - லொறி விபத்து - ஐவர் படுங்காயம்

க.கிஷாந்தன்-
நுவரெலியா - உடப்புஸ்ஸலாவ பிரதான வீதியில், 07.06.2018 அன்று மாலை இடம்பெற்ற விபத்தில், ஐவர் படுகாயமடைந்து நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து, கந்தப்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சென்.ஜோன்ஸ் தோட்டத்துக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
நுவரெலியாவிலிருந்து உடபுஸ்ஸலாவ பகுதியை நோக்கிப் பயணித்த தனியார் பஸ் ஒன்றும், கோணப்பிட்டியவிலிருந்து நுவரெலியாவை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த லொறியுமே, நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளன.

பஸ்ஸில் மோதுண்ட லொறி பிரதான வீதியை விட்டு விலகி பள்ளத்தில் பாய்ந்துள்ளது.
இந்த விபத்தின் போது, தனியார் பஸ்ஸில் பயணித்தவர்களில் இருவரும், லொறியில் பயணித்த மூவருமே பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

அத்துடன், லொறிக்குப் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த, கந்தப்பளை பொலிஸார், இவ்விபத்து சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -