எம்.ஐ.எம்.அஸ்ஹர்-
பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் ( தேசிய பாடசாலை ) களுவாஞ்சிகுடியில் க.பொ.த. உயர்தர கலை , வர்த்தக மற்றும் 13 வருட உத்தரவாத தொடர்கல்விப் பிரிவு ஆகிய துறைகளுக்கு இவ்வருடம் அனுமதிக்கப்பட்ட மாணவர்களை சிரேஸ்ட மாணவர்களும் ஆசிரியர்களும் வரவேற்கும் நிகழ்வு அண்மையில் பாடசாலை ஆராதனை மண்டபத்தில் பாடசாலை அதிபர் கே.தம்பிராஜா தலைமையில் இடம்பெற்றது.
பாடசாலை ஆலோசனையும் வழிகாட்டலும் பொறுப்பாசிரியர் கே.குமாரசிங்கத்தின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் தென்கிழக்கு பல்கலைக்கழக வர்த்தக முகாமைத்துவ பீட பீடாதிபதி கலாநிதி .எஸ்.குணபாலன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோருக்கும் ஆலோசனைகளையும் சிறந்த அறிவுரைகளையும் வழங்கினார்.
மட்டக்களப்பு மாவட்ட குருமார் சங்க ஆலோசகர் அகோரதேசியர் இரா.கோபாலசிங்கம் குருக்கள் மாணவர்களுக்கு நல்லாசிகளை வழங்கியதுடன் பாடசாலை பிரதி அதிபர் ரீ.ஜனேந்திரராஜா , பாடசாலை ஒழுக்காற்று சபை தலைவர் எஸ்.சுரேந்திரன் , பாடசாலை மாணவி வே.குவீனா மற்றும் மாணவர்களின் பெற்றோர்களும் உரையாற்றியதுடன் கணக்கியல் துறை ஆசிரியர் வீ.ரவீந்திரமூர்த்தி நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.
பாடசாலை பிரதி அதிபர்களான என்.நாகேந்திரன் , எஸ்.சுபேந்திரராஜா மற்றும் ஆசிரியர்களும் மாணவர்களும் பெற்றோர்களும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.