அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்குரிய தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்தை முன்னாள் கல்முனை மாநகர மேயர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப்புக்கு


கில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்குரிய தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்தை முன்னாள் கல்முனை மாநகர மேயர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப்புக்கு வழங்குமாறு அம்பாறை மாவட்ட இளைஞர் அமைப்பு வேண்டு கோள் விடுத்துள்ளது.இது தொடர்பாக கட்சியின் தேசிய தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீனுக்கு இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும் அமைப்பின் தலைவர் சாஜித் அவசர தொலைநகல் அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:


அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கல்முனை தொகுதியில் அதிக வாக்குகள் பெறுவதற்கும். குறிப்பாக சாய்ந்தமருதில் கட்சியின் செல்வாக்கை மக்கள் மயப்படுத்த ஒரு சந்தர்ப்பம் வரும். அது முன்னாள் கல்முனை மாநகர சபை முதல்வர் கலாநிதி சிராஸூக்கு தேசியப்பட்டியல் பாரளுமன்ற உறுப்பினர் பதவி வழங்குவதன் மூலம் சாய்ந்தமருது மற்றும் கல்முனை மக்களின் அபிலாசனைகளினை நன்கு அறிந்தவர் என்ற வகையிலும் கல்முனை தொகுதியில் கனவான் அரசியல் செய்து மக்களின் குறைகளை இரவு பகல் பாராது சேவை செய்தவர் என்ற ரீதியில் அவருக்கு வழங்கி எதிர்காலத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அரசியல் அதிகாரத்திக்கு சாதுவாக அமையும். கலாநிதி சிராஸ் மா நகர முதல்வராக இருந்த காலப் பகுதியில் மக்கள் மத்தியில் சிறந்த சேவை செய்து ஒரு வரலாற்று முதல்வராக இருத்தவர். இவர் முதல்வராக இருந்த காலம் கல்முனை மா நகரம் மட்டுமல்ல அது ஒரு பொற் காலமும் கூட. சிறந்த ஆளுமையும் நிருவாக திறன் கொண்டவர் என்ற ரீதியில் அவருக்கு தேசியப் பட்டியல் எம் .பி பதவியை வழங்க வேண்டும். குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வளர்ச்சிக்கு உளப்பூர்வமாக மக்கள் மயப்படுத்தியவர். மாவட்டத்தில் மூவின மக்களின் மனதில் இடம்பிடித்த ஒருவர்.கடந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் கட்சியின் தலைமையினால் வழங்கிய பொறுப்பை எது வித எதிர்பார்ப்பும் இன்றி நிறைவு செய்தவர் .அது மட்டுமல்ல மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள் மனதில் இடம்பிடித்தவர்.அவருக்கு வழங்குவதன் மூலம் கட்சியின் எதிர்கால வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.அது மட்டுமல்ல கல்முனை தொகுதியில் மூவின மக்களால் விரும்பப்படும் நபர் என்றால் அவர் சிராஸ் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. என தனது அறிக்கையில் அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -