அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் அம்பாரை மாவட்ட சமூக அபிவிருத்தித் திட்டத்தின் ஒரு பகுதியாக மாவடிப்பள்ளிகிளையினால் மாணவர்களுக்கிடையில் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் பொருட்டு உண்டியல்கள் மற்றும் கற்றல் உபகரணங்கள்வழங்கிவைக்கும் நிகழ்வு இன்று (27) மாவடிப்பள்ளியில் இடம்பெற்றது.
மாவடிப்பள்ளி கிளையின் தலைவர் முஹம்மட் ஹனிபா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பேரவையின் அம்பாரை மாவட்ட பணிப்பாளர் கே.எல்.சுபைர், போதைப் பொருள் தடுப்பு பிரிவின் தவிசாளரும் பிராந்திய உணவு மருந்து பரிசோதகருமான எஸ்.தஸ்தகீர் பேரவையின் தேசிய பொது பிரிதிச் செயலாளர் எம்.ஐ.உதுமாலெப்பை மற்றும் அக்கரைப்பற்று கிளைத்தலைவர், சாய்ந்தமருது கிளைச் செயலாளர் எஸ்.அஷ்ரப்கான், பாலமுனை தலைவர் ஐ.ஏ.சிராஜ் மற்றும் ஊர்ப்பிரமுகர்களும் பெற்றோரும் கலந்து சிறப்பித்தனர்.