அதிரடிப்படையினரினால் தாக்கப்பட்ட இருவர் வைத்தியசாலையில்


ராமச்சந்திரன்-
விசேட அதிரடிப்படையினரால் தாக்குதலுக்குள்ளாகியதாக கூறப்படும் இருவர் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொகாவந்தலா பொலிஸார் தெரிவித்தனர்

பொகவந்தலா லொயினோன் தோட்டத்தை சேர்ந்த இருவரே 17.05.2018 மாலை தாக்குதலுக்கு இழக்காகியுள்ளனர்

ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த விசேட அதிரடி படையினரினாலே பாதையில் சென்றுகொண்டிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக பொகவந்தலா பொலிஸ் நிலையத்தில் 17.05.2018 மாலை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது

தாக்குதலுக்கு இழக்காகிய இருவரும் பொகவந்தலா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் 18.05.2018 டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்
அன்மைகாலமாக பொகவந்நலா மானெளி வனப்பகுதியில் சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வு நடவடிக்கை ஈடுபட்டு வந்தவர்கள் அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்ட நிலையிலே நேற்று இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது
தாக்குதல் சம்பவம் தொடர்பில் கிடைக்கபெற்ற முறைப்பாட்டையடுத்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலா பொலிஸார் தெரிவித்தனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -