தலவாக்கலையில் கஞ்சா பக்கட்டுகள் 40 துடன் மூவர் கைது

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்-
விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கேரள கச்சா ஒருத்தொகையுடன் மூவர் கைது செய்துள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்

தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒலிரூட் பகுதியிலே வீடொன்றிலிருந்து 300 கிராம் கேரள கஞ்சாவை 02.05.2018 மதியம் பொலிஸார் மீட்டனர்
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த வீட்டை சுற்றிவளைத்து சேதணையிட்டபோதே விற்பனைக்காக பொதி செய்து வைக்கப்ட்டிருந்த 40 கஞ்சா பக்கட்டுக்களை மீட்டுள்ளதுடன் விற்பனையாளர் ஒருவரையும் கஞ்சா வாங்கச்சென்ற இருவருமாக மூவரை பொலிஸார் கைது செய்தனர்
ஒலிரூட் பகுதியை சேர்ந்த சந்தேக நபர்கள் மூவரையும் 03.05.2018 நுவரெலியா மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்துவதாக பொலிஸார் தெரிவித்தனர்.



எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -