பட்டிருப்பு தேசியப் பாடசாலை, களுவாஞ்சிகுடி மாணவர்கள் கிழக்கு மாகாண மட்டத்தில் வெற்றிபெற்று தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

வடிவேல் சக்திவேல் ,எம்.ஐ.எம்.அஸ்ஹர்-

ல்வி அமைச்சு நாடு தளுவிய ரீதியில் பாடசாலைகளுக்கிடையில் நடாத்தி வரும் ஒலிம்பியாட் போட்டியில் பட்டிருப்பு தேசியப் பாடசாலை, களுவாஞ்சிகுடி மாணவர்கள் கிழக்கு மாகாண மட்டத்தில் வெற்றிபெற்று தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

தரம் 7 ஐச் சேர்ந்த ரீ.அபிற்சான் ,ஏ.ராமேந்திரா தரம் 8 ஐச் சேர்ந்த கே.கஜராம் ,எம்.தஸாப்தன் மற்றும் கல்விப் பொதுத்தராதர சாதாரண பிரிவைச் சேர்ந்த என்.குருந்திகரன் ஆகிய மாணவர்கள் கொழும்பில் இடம்பெறவுள்ள தேசிய மட்ட போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பைப் பெற்றுள்ளதாக பாடசாலையின் பிரதி அதிபர் திரு. ரீ.ஜனேந்திரராஜா தெரிவித்தார்.

தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கும் ,இம்மாணவர்களை நெறிப்படுத்திய ஆசிரியர்களுக்கும் ,அதிபர் திரு.தம்பிராஜா ,பிரதி அதிபர்கள் ,ஆசிரியர்கள், மாணவர்கள்,கல்விசாரா உத்தியோஸ்தர்கள், பாடசாலை அபிவிருத்திச்சங்க பிரதிநிதிகள், பழைய மாணவர்சங்க பிரதிநிதிகள், நலன்விரும்பிகள் தமது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -