சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலை அபிவிருத்திக்கு சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசீம் 1 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு


சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையின் பெளதீக அபிவிருத்திக்கு சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசீம் 1 கோடி ரூபா நிதியினை ஒதுக்கீடு செய்துதருவதாக உறுதியளித்துள்ளார் என வைத்தியசாலை அபிவிருத்திச் சபையின் செயலாளர் றியாத் ஏ.மஜீத் தெரிவித்துள்ளார்.

சாய்ந்தமருது வைத்தியசாலை அபிவிருத்திச் சபையின் செயலாளர் றியாத் ஏ. மஜீத் மற்றும் சபை உறுப்பினர் எம்.ஐ.சம்சுதீன் ஆகியோருக்கும் சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசீமுக்குமிடையேயான இரண்டாம் கட்ட சந்திப்பு இன்று காலை (22) ஞாயிற்றுக் கிழமையும் பிரதி அமைச்சரின் நிந்தவூர் வாசஸ்தளத்தில் இடம்பெற்றது.

இதற்கமைவாக வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுக் கட்டட விஸ்தரிப்பு மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய கூட்ட மண்டப நிர்மாணத்திற்கு 70 லட்சம் ரூபாவும் வைத்தியசாலையின் விடுதிகளுக்கான அஸ்பெஸ்டட் சீட் பொருத்துதல் மற்றும் நுளைவாயில் நிர்மாணத்திற்கு 30 லட்சம் ரூபாவுமாக 1 கோடி ரூபா நிதியினை இவ்வருடத்திற்கு ஒதுக்கீடு செய்துள்ளார்.
சாய்ந்தமருது வைத்தியசாலையினை தரமுயர்த்துதல் சம்பந்தமாக வைத்தியசாலை அபிவிருத்திச் சபை விடுத்த வேண்டுகோளை ஏற்ற பிரதி அமைச்சர் பைசால் காசீம் எனது காலப்பகுதிற்குள் அம்பாறை மாவட்டத்தின் கரையோர பிரதேச வைத்தியசாலைகளில் விசேட வைத்திய பிரிவுகளை உருவாக்க திட்டமிட்டுள்ளேன் அதனடிப்படையில் சாய்ந்தமருது வைத்தியசாலையில் தனித்துவமான ஒரு விசேட வைத்திய பிரிவினை ஏற்படுத்தி தருவேன் எனவும் உறுதியளித்துள்ளார் என செயலாளர் றியாத் ஏ.மஜீத் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -