சிரியாவில் நடைபெறும் படுகொலைக்கு எதிராக மட்டக்களப்பு மாவட்ட கலைஞர்கள் ஒன்றிணைந்து, மட்டக்களப்பு நகர் காந்திப்பூங்கா முன்பாக கண்டன போராட்டம் ஒன்றினை நேற்று பிற்பகல் 04 மணியளவில் நடாத்தினர்.

அப்பாவி மக்களை படுகொலை செய்ய வேண்டாம், மக்கள் வாழும் பகுதிகளில் குண்டுத்தாக்குதல் நடத்த வேண்டாம், பொதுமக்களை பாதுகாக்க யுத்தத்தை உடன் நிறுத்தவும், யுத்தத்தின் வலி கொடுமையானது எனவே அப்பாவி மக்களின் உயிருடன் விளையாட வேண்டாம் எனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கருத்து வெளியிட்டனர்.

சிரியா கௌடாவில் நடைபெற்று வரும் போரில், ஆயிரக்கணக்கில் மக்கள் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். இதில் அதிகமாக அப்பாவி குழந்தைகளே கொல்லப்பட்டு வருகின்றனர். இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட, காயமடைந்த குழந்தைகளின் புகைப்படங்கள், சமூக வலைத்தளங்கள் ஊடாக வைரலகி உலகம் முழுவதிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
இக் கண்டன போராட்டத்தில் கலைஞர்கள், எழுத்தாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.வீகே
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -