அபிவிருத்தித் திட்டங்களை துரிதப்படுத்துமாறு உத்தரவு - அமைச்சர் ரவூப் ஹக்கீம்


தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் மேற்கொள்ளப்படும் 2018ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தித் திட்டங்களை துரிதப்படுத்துமாறு நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் உயரதிகாரிகளுடன் சபையின் கேட்போர் கூடத்தில் நேற்று முன்தினம் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

கொழும்பு பிரதேசத்தில் ஏற்படுத்தப்படுவரும் பாரியளவிலான அபிவிருத்தித் திட்டங்கள் பூர்த்தியாகும்போது தேவைப்படக்கூடிய குடிநீர் தொடர்பாக ஏற்படும் கேள்விகளுக்கு போதிய நீரைப் பெற்றுக்கொடுக்கவும், வறட்சி காலங்களில் களுகங்கை மற்றும் களனி கங்கை பிரதேசங்களில் குடிநீரில் உவர்நீர் கலப்பதை தவிர்க்க தடுப்புச்சுவர் அமைக்கும் திட்டத்தினை விரைவுபடுத்தும் நோக்கில் அமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -