திருகோணமலை மாவட்டம் தம்பலகாமப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பட்டிமேடு கிராமத்தில் கிராமிய அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலொன்று வெள்ளிக் கிழமை(09)தம்பலகாமம் பட்டிமேடு கிராம அபிவிருத்திச் சங்க கட்டிடத்தில் இடம் பெற்றது.
இதனை தேசிய சமூக அபிவிருத்தி நிறுவகத்தின் சமூகப் பணி இறுதி வருட மாணவன் என்.இஜாஸ் இவ் ஆய்வினை திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையின் உளநலப் பிரிவினால் ஏற்பாடு செய்திருந்தார். .அப் பகுதியின் கிராமிய வரைபடம் ஊடாக பல்வேறு தேவை மதிப்பீடுகளை கிராம மக்களுடன் இணைந்து செயற்பாடுகள் இணங்காணப்பட்டன இதனை மையமாக வைத்து தனது ஆறு மாத கால களப்பணியின் ஆய்வினை திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையின் உளநலப் பிரிவில் இவர் கடமையாற்றுவதுடன் இப்பகுதியிலேயே தனது களப் பணி தொடர்பான பல்வேறு ஆய்வுகள் இடம் பெறவுள்ளதாகவும் சமூகப் பணி மாணவன் என்.இஜாஸ் தெரிவித்தார்
இக் கலந்துரையாடலில் தம்பலகாம பிரதேச செயலகத்தின் சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.ஹபீபுள்ளா கிராம உத்தியோகத்தர் திரு. நாகஜோதி உட்பட அப்பகுதியில் உள்ள கிராமவாசிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.