மருதமுனையில் பெயின்ட் பூச மாடிவீட்டின் உயரத்திற்கு ஏறியவர் கீழே விழுந்து மரணம்

ஏ.எல்.எம்.ஸினாஸ்-

ருதமுனை பிரதான வீதியிலுள்ள வீடு ஒன்றில் பெயின்ட் பூச மாடிவீட்டின் உயரத்திற்கு ஏறிய ஒருவர் இன்று(10.03.2018) தவறுதலாக கீழே விழுந்து பரிதாபகரமாக உயிரிளந்துள்ளார்

இந்தச் சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது,

மருதமுனை பிரதான வீதியிலுள்ள வீடு ஒன்றில் வழமைபோன்று இன்று (10) பெயின்ட் பூச வேலைக்கு வந்த பாண்டிருப்பு-02 ஐ சேர்ந்த ஆறுமுகம் தயாபரன் (வயது 56)என்பவர் பெயின்ட் பூசிக் கொண்டிருந்த போது தவறுதலாக உயரத்திலிருந்து கீழே விழுந்து ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

பாதுகாப்பற்ற முறையில் மாடி வீட்டின் உயரத்தில் நின்று கொண்டு வேலை செய்தமையாலயே இந்த பரிதாபகரமான விபத்து நேர்ந்துள்ளதாக அறிய முடிகிறது.

சம்பவ இடத்துக்கு வருகைதந்த கல்முனை நீதவான் நீதிமன்ற நீதிபதி ஐ.என்.றிஸ்வான் பிரேத பரிசோதனை செய்வதற்காக சம்மாந்துறை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்ல உத்தரவிட்டார்.

மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -