ஸ்ரீலங்கா ஷரீஆ கவுன்ஸில் ஏற்பாட்டின் இன்று(04) இஸ்லாமிய மாநாடு ஹூஜ்ஜத்துல் இஸ்லாம் இமாம் அபூ ஹாமித் அல் கஸ்ஸாலி எனும் தலைப்பில் நடைபெற்றது. நாட்டின் நாலா பகத்திலிருந்தும் அரபு மத்தரசாக்களின் மொலவிமாா்கள் 700 பேர் கலந்து கொண்டனா். இந் நிகழ்வு கொழும்பு பெரிய பள்ளிவசாலில் ஷரீஆ கவுன்சிலின் தலைவா் கலாநிதி மௌலவி எம்.சி ஹஸ்புல்லாஹ் தலைமையில் நடைபெற்றது,
இம் மநாட்டில் கொழும்பு பெரிய பள்ளிவாசல் பொதுச் செயலாளா் தௌபீக் சுபைா், குர்ஆன் சுன்னாவின் அடிப்படையில் அமைந்த துாய சூபித்துவம்” எனும் தலைப்பில் அளுத்கம கல்விக் கல்லுாாி உப பீடாதிபதி எம்.ஆர்.எம். சில்மி (நுாரி) எம் . ஏ இமாம் கஸ்ஸாலி ரஹிமஹூல்லாஹ் தகா்த்தெறிந்த அத்துவைதம் எனும் தலைப்பில் மௌலவி ஸூஹ்ருத்தீன் முஹம்மத் , மௌலவி ஏ.எல் .எம். ரிழா மக்துாமி (ஹஸனி) , மௌலவஜ ஏ.ஜி ஹாமித் ஸதகா (பஹ்ஜி) மௌலவி எச்.அப்துல் நாஸா் (ரஹ்மானி) கலிபத்துல் குலபா ஷரிஆ கவுன்சிலின் உபதலைவா் கலீபத்துல் குலபா ஜே அப்துல் ஹமீத்(பஹ்ஜி) ஆகியோறும் விரிவுரையாற்றினாா்கள்.
சிரியா, அம்பாறை பள்ளிவாசல் உடைப்பு போன்ற சம்பவங்களுக்கு கண்டனத் தீா்மாணங்களும் நிறைவேற்றப்பட்டன. துஆபிராத்தனையும் நடைபெற்றது.