கிண்ணியா நகர சபையினால் மாஞ்சோலை பிரதேசத்தில் டெங்கு சிரமதானம்





ஹஸ்பர் ஏ ஹலீம்-

ண்மையில் பெய்த மழையின் காரணமாக கிண்ணியா நகரசபைக்குட்பட்ட பிரதேசங்களில் டெங்கு பரவும் அபாயத்தைத் தடுக்கும் நோக்கில் கிண்ணியா நகரசபையின் செயலாளர் என். எம். நௌபீஸ் அவர்களின் தலைமையில் வெள்ளிக் கிழமை (02) மாஞ்சோலை பிரதேசத்தில் டெங்கு சிரமதானம் நடைபெற்றது. கிண்ணியா நகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் இவ்வாறான டெங்கு ஒழிப்பின் நடவடிக்கைகளின்போது எமது ஊழியர்களுடனான ஒத்துழைப்புக்களுடன் துரிதமாக தொடர்ந்தும் நடைபெறும் என இதன்போது பொது மக்களுடனான சந்திப்பின்போது கிண்ணியா நகர சபையின் செயலாளர் என்.எம்.நௌபீஸ் தெரிவித்தார்.

 அத்துடன் தொடர்ச்சியாக ஏனைய பிரதேசங்களிலும் சிரமதானம் மேற்கொள்ள தீர்மாணிக்கப்பட்டுள்ளது. இதில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள், நகரசபை மேற்பார்வையாளர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டதுடன், பொலிஸ் உத்தியோகத்தர்கள், சிவில் பாதுகாப்பு படை உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -