வாக்களிப்பு விபரமும்-வாக்கெண்ணும் நடவடிக்கையும்

ள்ளுராட்சி சபைத் தேர்தல் வாக்கெடுப்புக்கள் இன்று மாலை 4.00 மணிக்கு நிறைவடைந்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.

இம்முறை வாக்குகளை எண்ணும் பணிகள் குறிப்பிட்ட சில வாக்குச் சாவடிகளிலேயே இடம்பெறவுள்ளதனால், அப்பணிகளும் இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கிடைக்கப் பெற்றுள்ள தகவல்களின் அடிப்படையில் இன்று பிற்பகல் 3.00 மணிவரையான காலப் பகுதியில்,

கம்பஹா மாவட்டத்தில் – 73 வீத வாக்குப் பதிவுகளும்,

களுத்துறை மாவட்டத்தில் – 70 வீத வாக்குப் பதிவுகளும்,

மாத்தறை மாவட்டத்தில் – 64 வீத வாக்குப் பதிவுகளும்,

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் – 65 வீத வாக்குப் பதிவுகளும்,

இரத்தினபுரி மாவட்டத்தில் – 75 -80 வீத வாக்குப் பதிவுகளும்,

மொனராகலை மாவட்டத்தில் – 75 வீத வாக்குப் பதிவுகளும்,

பொலன்னறுவை மாவட்டத்தில் – 68 வீத வாக்குப் பதிவுகளும்,

புத்தளம் மாவட்டத்தில் – 70 வீத வாக்குப் பதிவுகளும்,

கண்டி மாவட்டத்தில் – 65 -70 வீத வாக்குப் பதிவுகளும்,

முல்லைத்தீவு மாவட்டத்தில் – 75 வீத வாக்குப் பதிவுகளும்,

பதுளையில் மாவட்டத்தில் – 60 வீத வாக்குப் பதிவுகளும்,

நுவரெலிய மாவட்டத்தில் – 70 வீத வாக்குப் பதிவுகளும்,

வவுனியா மாவட்டத்தில் – 60வீத வாக்குப் பதிவுகளும்,

கிளிநொச்சி மாவட்டத்தில் – 69 வீத வாக்குப் பதிவுகளும்,

மன்னார் மாவட்டத்தில் – 70 வீத வாக்குப் பதிவுகளும்,

யாழ்ப்பாணத்தில் மாவட்டத்தில் – 47 வீத வாக்குப் பதிவுகளும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -