அட்டன் நகர் சேக்குளர் பகுதியில் குடியிருப்பொன்றில் திடீரென தீ பற்றியமையினால் குடியிருப்பின் கூரை சேதமாகியதாக அட்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர்
அட்டன் இலங்கை போக்கு வரத்து சபை வீதியின் சேக்குளர் பகுதியிலே 19.02.2018 மதியம் 12.30 மணியளவில் தீ விபத்து இடம்பெற்றுள்ளது
அன்மைக்காலமாக மலையகத்தில் அதிக வெப்ப நிலை கானப்படுகின்ற நிலையில் அதிக வெப்பம் காரணமாகவே குறித்த வீட்டின் கூரைப்பகுதியில் தீ பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்
மேலும் தீ விபத்தினால் உஸ்ரீயிராபத்துக்கள் ஏற்படாத போதிலும் வீட்டின் கூரைப்பகுதி சேதமாகியுள்ளதுடன் அயலவர்களும் பொலிஸாரும் இணைந்து தீயை கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர் தீ சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணையை அட்டன் பொலிஸார் மேற்கொள்கின்றனர்