தீர்வு கிட்டும்வரை தொடர் பணிப் பகிஷ்கரிப்பு என்கிறார் தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்க தலைவர்!!!


ல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் கல்விசாரா ஊழியர்கள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு அரசை வலியுறுத்தும் விதத்தில் 28.02.2018 தொடக்கம் தொடர்ச்சியான வேலைநிறுத்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக்குழுவின் தீர்மானத்துக்கு அமைவாக தென்கிழக்குப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களால் முன்னெடுக்கப்படும் போராட்டம் பல்கலைக்கழக முற்றலில் ஊழியர் சங்கத்தின் தலைவர் எம். எம் நௌபர் தலைமையில் இடம்பெறுகின்றது.

குறித்த போராட்டத்துக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஊழியர்கள் உள்ளிட்ட பல்கலைக்கழக மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் தற்காலிக மற்றும் சமயாசமய ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் கலந்துகொள்ள வேண்டும் என பணிக்கப்பட்டிருன்தனர்.

இங்கு கருத்துத் தெரிவித்த ஊழியர் சங்கத்தலைவர் நௌபர்,

பல்கலைக்கழக போதனைசாரா ஊழியர்களால் 2016.07.27 முதல் முன்னெடுக்கப்பட்ட வேலைநிறுத்தம் உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் மற்றும் பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குளுவின் தலைவரால் கையெழுத்திட்டு வழங்கப்பட்ட உடன்பாட்டு கடிதத்தின் அடிப்படையில் தற்காலிகமாக முடிவுக்கு கொண்டுவரப்பட்மை அனைவரும் அறிந்ததே.

மேற்கண்ட உடன்பாட்டிற்கு இசைவாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாமை, மற்றும் பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவின் உயர்மட்ட பதவிகள் நிரப்பப்படுவதற்கான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாமை என்பவற்றோடு அப்பதவிகள் மூலம் நிறைவேற்றப்படவேண்டிய கடமைகளில் காணப்படும் சீரற்ற தன்மையை நிவர்த்தி செய்யும்படி அனைத்து பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக்குழுவால் வழங்கப்பட்ட அழுத்தத்தை கவனத்திற் கொள்ளாத்தன்மையை காணமுடிகின்றது.

எனவே அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 24 தொழிற்சங்கங்கள் இணைந்த ஒருங்கிணைந்த கூட்டுக்குழுவின் 2018 பெப்ரவரி 06ஆம் திகதி இடம்பெற்ற விசேட சந்திப்பின்போது இடம்பெற்ற நீண்ட கலந்துரையாடலின் முடிவில் இம்முடிவு எடுக்கப்பட்டு இம்முடிவானது 25.02.2018 அன்று கொழும்பு கட்புல அரங்க பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற நீண்ட நேர கலந்துரையாடலின் பின்னர் உறுதிசெய்யப்பட்டது என்றும்

இத்தீர்மானத்திற்கமைவாக 28.02.2018 புதன்கிழமை முதல் தென்கிழக்குப் பல்கலைக்கழக போதனைசாரா ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் 25.02.2018 கொழும்பு கட்புல அரங்க பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட சங்கப் பிரதிநிதிகள் அக்லந்துரையாடலில் 28.02.2018 புதன்கிழமை ஒவ்வொரு பல்கலைக்கழகங்களிலும் கவனஈர்ப்பு போராட்டங்களை நிகழ்த்துவது என்றும் 02.03.2018 வெள்ளிக்;கிழமை மீண்டும் கொழும்பு கட்புல அரங்க பல்கலைக்கழகத்தில் அனைத்து பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக்குழு கூடி நிலமைகளை ஆராய்வதோடு பத்திரிகையாளர் சந்திப்பினை நிகழ்த்துவது என்றும்,` வேலைநிறுத்தம் தொடருமாயின் 06.03.2018 செவ்வாய்கிழமை அனைத்து பல்கலைக்கழகங்களையும் சேர்ந்த போதனைசாரா பணியாளர்களும் கொழும்புப் பல்கலைக்கழகத்திலிருந்து பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழு நோக்கி பேரணியாகச் சென்று அங்கு கவனஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபடுவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஊழியர் சங்க தலைவர் நௌபர்,

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் சம்மேளனம் 2016 ஜூலை 27 ஆம் திகதியிலிருந்து தேசிய பல்கலைக்கழகத்தினுள் செயற்படுத்தப்பட்ட தொழில் போராட்டம் உயர் கல்வி மற்றும பெரும் தெருக்கள் அமைச்சருடைய மற்றும் இராஜாங்க அமைச்சருடைய பங்குபற்றுதலுடன் ஊடக கலந்துரையாடல் நடாத்தி உயர் கல்வி மற்றும் பெரும் தெருக்கள் அமைச்சின் செயலாளர் கையொப்பமிட்டு வழங்கிய இணக்கப்பாட்டுக் கடிதத்தினை அடிப்படையாகக் கொண்டு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது

அந்த இணக்கப்பாட்டிற்கு அமைய மாதாந்த இழப்பீட்டுப் படி (MCA) கொடுப்பனவை வருடாந்த அதிகரிப்பு 2020 வருடமாகும் போது 100% வரை அதிகரிப்பதற்கு இணங்கிக் கொண்டு இருந்தும் அதற்குரியதை 2018 ஜனவரியில் அதிகரிப்பதற்குரியதாக சுற்றுநிருபம் இதுவரையும் வழங்கப்படவில்லை என்பதுடன் ஏனைய அநேகமான இணக்கப்பாடுகளையும் நிறைவேற்றவில்லை என்றும் தெரிவித்தார்.

இணக்கப்பாட்டு கடிதத்தில் இடை நிறுத்கப்பட்டிருந்த மொழிக் கொடுப்பனவு, சொத்துக்கள் கடன் எல்லையை விலக்குதல், வைத்திய காப்புறுதி முறைமை, முறையான ஓய்வூதிய முறையினை ஸ்தாபித்தல், பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழு சுற்றுநிருப இலக்கம் 15/2017 யை இரத்துச் செய்து பதவி உயர்வுக்காக இருக்கின்ற எல்லையினை விலக்குதல், 17/2016 சம்பள சுற்றுநிருபம் மூலம் சம்பளத்தினை அதிகரிக்கும் போது பல்கலைக்கழக சேவைக்கு நிகழ்ந்துள்ள இறக்கங்களை விலக்குதல் மற்றும் ஆட்சேர்ப்புச் சட்டங்களை மீளாய்வு செய்தல்.

அது போன்று பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவின் உத்தியோகத்தர்கள் நினைத்தபடி நடவடிக்ககைகளை மேற்கொண்டு பல்வேறு சுற்றுநிருபங்கள் மூலம் இது வரையும் அனுபவித்த சேவை உரிமைகளை மற்றும் வரபிரசாதங்களையும் வெட்டுதல் மற்றும் 08 வருடங்களுக்கு அதிக காலம் ஆரம்பித்த பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவின் உயர் உத்தியோகத்தர்கள் அதாவது மேலதிக செயலாளர்கள் 3 பதவிகள் (மனித வளப் பிரிவு, உட்பிரவேசப் பிரிவு,கல்வி நடவடிக்கை பிரிவு) நிதி நிர்வாகம்/ பிரதான கணக்காளர், பிரதான உள்ளக கணக்காளர், மற்றும் பிரதி செயலாளர்கள் பதவி வெற்றிடங்கள் நிரப்பாமை மற்றும் ஏனைய நடவடிக்கை இல்லாமை. போன்ற விடயங்களையும் சுட்டிக்காட்டினார். 







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -