ஆசியாவின் ஆச்சரியம்
+++++++++++++++++++++
Mohamed Nizous
கொத்துக் குளிசை மூலம்
குழந்தை பிறக்காதென்று
ஒத்துக் கொள்ளும் வரை
உயிர் வதைக்கப்படும்
காவல் துறை அருகில்
காடைத்தனம் அரங்கேறும்
யாவும் முடிந்த பின்
யகபாலன வெளியே வரும்
பள்ளி வாசல் சுவர்
தள்ளி விழுத்தப்படும்
உள்ளே உள்ள பொருள்
உடைத்து நொறுக்கப்படும்
மந்திரி மார் மீதும்
மந்தியாய் பாயப்படும்
சந்தியின் சண்டித்தனங்கள்
சாதுக்களால் இயக்கப்படும்
முற்றும் துறந்தவர்களால்
முற்றும் பிரச்சினைகள்
குற்றம் செய்பவரைக்
கூடி வாழ்த்தப்படும்
நல்லாட்சி என்ற சொல்
நாறிப் புளித்துப் போகும்
செல்லாக் காசுகளாக
சிறுபான்மை வாடி நிற்கும்
இன்னும் என்ன ஆச்சரியம்
இங்கு வரப் போகிறதோ
எண்ணத்தில் அச்சத்தோடு
இருக்கிறார்கள் நல்லவர்கள்