ஆசியாவின் ஆச்சரியம் (கவிதை)



ஆசியாவின் ஆச்சரியம்
+++++++++++++++++++++
Mohamed Nizous

கொத்துக் குளிசை மூலம்
குழந்தை பிறக்காதென்று
ஒத்துக் கொள்ளும் வரை
உயிர் வதைக்கப்படும்

காவல் துறை அருகில்
காடைத்தனம் அரங்கேறும்
யாவும் முடிந்த பின்
யகபாலன வெளியே வரும்

பள்ளி வாசல் சுவர்
தள்ளி விழுத்தப்படும்
உள்ளே உள்ள பொருள்
உடைத்து நொறுக்கப்படும்

மந்திரி மார் மீதும்
மந்தியாய் பாயப்படும்
சந்தியின் சண்டித்தனங்கள்
சாதுக்களால் இயக்கப்படும்

முற்றும் துறந்தவர்களால்
முற்றும் பிரச்சினைகள்
குற்றம் செய்பவரைக்
கூடி வாழ்த்தப்படும்

நல்லாட்சி என்ற சொல்
நாறிப் புளித்துப் போகும்
செல்லாக் காசுகளாக
சிறுபான்மை வாடி நிற்கும்

இன்னும் என்ன ஆச்சரியம்
இங்கு வரப் போகிறதோ
எண்ணத்தில் அச்சத்தோடு
இருக்கிறார்கள் நல்லவர்கள்

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -