இம்முறை இடம்பெற்ற உள்ளுராட்சிசபைத் தேர்தலில் கல்முனை மாநகரசபைக்காக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்சார்பில் போட்டியிட்ட கலீலுர் ரஹ்மான் அந்தக்கட்சிக்கு கிடைத்த பட்டியல் தெரிவின் ஊடாக சபை உறுப்பினராக தெரிவு செய்யப்படும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.
கடந்த பொதுத்தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட கலீலுர் ரஹ்மான் கட்சியின் தீவிர செயற்பாட்டாளரும் கல்வியலாளருமாகும். இளம் துடிப்புள்ள கல்வியலாளர்கள் கல்முனை மாநகரசபை போன்ற இடங்களில் உறுப்பினர்களாக இருப்பது அந்த அந்த பிரதேசங்களின் அபிவிருத்திக்கும் விசேடமாக கட்சிகள் மாறாத இவர்களால் கட்சியை வெற்றிப்பாதைக்கு இட்டுச்செல்வதற்கும் வாய்ப்பாக இருக்கும் என்றும் பிரதேச வாசிகளால் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.
உறுப்பினராக கட்சியின் தலைமையால் தெரிவு செயப்பட்டமைக்காக தலைமைக்கு பிரதேச மக்கள் நன்றி கூறி வருகின்றனர்.
