நாட்டின் பிரதான கட்சிகளுக்கு எதிர்கால அரசியல் எவ்வாறு அமையும் என நிர்ணயக்ககூடிய தேர்தலாக இந்த உள்ளுராட்சி சபை தேர்தல் காணப்படுகின்றது




- கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவிப்பு


க.கிஷாந்தன்-

நாட்டின் பிரதான கட்சிகளுக்கு எதிர்கால அரசியல் எவ்வாறு அமையும் என நிர்ணயக்ககூடிய தேர்தலாக இந்த உள்ளுராட்சி சபை தேர்தல் மிக முக்கியமானதாக காணப்படுகின்றது என கல்வி இராஜாங்க அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பலாங்கொடை இம்புல்பே பிரதேச சபைக்கு போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிக்கும் முகமாக றை தோட்டம் கெபொக் பிரிவில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த நல்லாட்சி அரசாங்கத்தின் மூலம் இந்த நாட்டில் இனி பிரச்சினைகள் இடம்பெறுவதற்கு இடமில்லை. யாழ்ப்பாணத்திலேயே இன்று பிரச்சினைகள் இல்லை என்றால் மலையக மக்களுக்கும் ஏனைய சமூகத்தினருக்கும் பிரச்சினைகள் வராது.

எதிர்வரும் 10ம் திகதி நடைபெறவுள்ள இந்த உள்ளுராட்சி சபை தேர்தல் எதிர்கால அரசியலை தீர்மானிக்க கூடிய ஒரு முக்கியமான தேர்தலாகும். ஜனாதிபதி தேர்தலை விட இந்த உள்ளுராட்சி சபை தேர்தல் மிக அவசியமானதாக காணப்படுகின்றது. ஒரு புறம் ஒரு நாளுக்கு பிரதமர் பல கூட்டங்களுக்கு செல்கின்றார். மறுபுறம் ஜனாதிபதி ஒரு நாளுக்கு பல கூட்டங்களுக்கு செல்கின்றார்.

நாட்டின் பிரதான கட்சிகளுக்கு எதிர்கால அரசியல் எவ்வாறு அமையும் என நிர்ணயக்ககூடிய தேர்தலாக இது காணப்படுகின்றது. இதனாலேயே இவர்கள் பல கூட்டங்களுக்கு செல்கின்றனர்.

ஆதலால் தமிழர்கள் இதில் முழு பயனை அடையக்கூடிய வகையில் தங்களது வாக்குகளை அந்தந்த பிரதிநிதிகளுக்கு அளித்து பிரதிநிதிகளை வெற்றிப்பெற செய்யவதன் மூலம் தான் தமது தன்மானத்தை காப்பாற்றிக்கொள்ள முடியும்.

ஆகவே இந்த தன்மானத்தை காப்பாற்ற ஒருமித்து எல்லோரும் ஒன்று சேர்ந்து தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -