கல்முனை ஆதாரவைத்தியசாலையில் நடைபெற்ற புற்றுநோய் தின சிறப்பு விழிப்பூட்டல் கருத்தரங்கு!

காரைதீவு நிருபர் சகா-
லக புற்றுநோய் தினமான மாசி 4ம் திகதியை முன்னிட்டு கல்முனை ஆதாரவைத்தியசாலையில் வைத்திய அத்தியட்சகர் இரா முரளீஸ்வரன் தலைமையில் சுகாதார கல்விப் பிரிவும் தொற்றுநோய்பிரிவினரும் இணைந்து சிறப்பு நிகழ்வொன்றை நடத்தியுள்ளனர்.

இந்நிகழ்வானது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் வைத்திய நிபுணர் வைத்தியர் சாமாகுணதிலக சிறப்பு விழிப்பூட்டல் கருத்தரங்கு மூலம் இடம்பெற்றது.
நிகழ்வில் வைத்திய அத்தியட்சகர் இரா முரளீஸ்வரன் கூறுகையில் நிபுணர் சாமாகுணதிலக தான் ஒரு நிபுணர் என்று மட்டுமல்லாமல் கடமைக்கு அப்பால் மனிதநேயம் நோயாளியின் நலன்கள் நோயாளியின் எதிர்காலம் நோய்த்தடுப்பு நோயாளியின் தேவை நோயாளியை எவ்வாறு பேணுதல் என்ற விடயங்களில் மிகுந்த அக்கறை உடையவர் எனவும் . இவரின் விழிப்பூட்டல் மூலம் நாம் அனைவரும் நன்மை பெறலாம் எனவும் கூறினார்.
நிகழ்வில் ஓர் புற்று நோயாளியின் அறிகுறிகள் என்ன சிகிச்சையின் முக்கியத்துவம்இ எவ்வாறு சிகிச்சையளிப்பதுஇ
முக்கியமாக அவரிற்கு தேவையான ஓர் அரவணைப்பு
அவசியம் எனவும் புகைப்படம் ஒன்றின் மூலம் காண்பித்தார்.மேலும் பல விளக்கங்களும் தொடர்ந்தன.
இவ்வாறான செயல்திட்ட நிகழ்வுகள் கல்முனை ஆதாரவைத்தியசாலையில் தொடராக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

வைத்திய அத்தியட்சகர் அவர்களின் சிறப்பு இயல்புகளில் இவ்வாறான நிகழ்வுகளுக்கான முக்கியத்துவமும் ஒரு சிறப்பம்சமாகும்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -