நாளை அம்பாறையில் இலங்கையின் 70வது சுதந்திரதின ஏற்பாடுகள்!


காரைதீவுநிருபர் சகா-

லங்கையின் 70வது சுதந்திர தின வைபவத்தையொட்டி அம்பாறை மாவட்டத்தின் பிரதான நிகழ்வு நாளை பெப.4ஆம் திகதியன்று அம்பாறையில் நடைபெறவுள்ளது.

அதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் யாவும் பூர்த்தியடைந்திருப்பதாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கதிர்காமத்தம்பி விமலநாதன் தெரிவித்தார்.
அதற்;கான ஒத்திகை நிகழ்வுகள் கடந்த 2தினங்களாக நடைபெற்றுவருகின்றன.

இதற்கான ஏற்பாட்டுக்குழுக்கூட்டம் அம்பாறை மாவட்ட செயலகத்தில் அரசாங்கஅதிபர் துசிதவணிகசிங்க தலைமையில் நடைபெற்றது.
அதன்போது முப்படைத்துறை அதிகாரிகள் திணைக்களத்தலைவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைவரும் கலந்து கொண்டனர்.

அம்பாறை நகரசபை மைதானத்தில் நடைபெறவுள்ள இச்சுதந்திரதின நிகழ்வில் மூவின மாணவர்களின் கலைநிகழ்வுகள் மேடையேறவுள்ளன.

முன்னதாக முப்டைகளினதும் பாண்ட்வாத்திய அணிகளினதும் அணிவகுப்பு மரியாதை இடம்பெறவுள்ளது.

இதேவேளை மாவட்டத்தின் 20பிரதேசசெயலகங்களில் அந்தந்த பிரதேச செயலாளர்கள் தலைமையில் சுதந்திரதின நிகழ்வுகள் நடைபெற ஏற்பாடாகியுள்ளன என்று மேலதிக அரசாங்க அதிபர் க.விமலநாதன் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -