இலங்கையில் தேர்தலில் போட்டியிடக் கூடிய வகையில் நேற்று(07) அவருக்குக் குடியுரிமை வழங்கப்பட்டது என அறிய முடிகின்றது.
கடந்த ஆண்டு அவர், இலங்கைக் குடியுரிமைக்கு விண்ணப்பித்தபோதும் அது நிராகரிக்கப்பட்டது.இந்த நிலையிலேயே தற்போது வரதராஜப்பெருமாளுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.
இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பின் 13ஆம் திருத்தின் பின்னர் வந்த இணைந்த வடக்கு - கிழக்கின் முதலாவது முதலமைச்சராக அவர் பதவி வகித்தார்.
எனினும் 13ஆவது திருத்தத்தை தீர்வாக ஏற்க தமிழீழ விடுதலைப் புலிகள், சுயாட்சி அதிகாரங்களைக் கேட்டனர்.
அதனால் ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து முதலமைச்சர் பதவியைத் துறந்த வரதராஜப்பெருமாள், இந்தியாவில் தஞ்சமடைந்தார்.
போர் நிறைவடைந்ததையடுத்து இந்தியாவிலிருந்து சுற்றுலா நுழைவு விசாவில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து சென்ற வரதராஜப்பெருமாளுக்கு நேற்று(07) இலங்கைக் குடியுரிமை மீள வழங்கப்பட்டது.IBC