இலங்கைக் குடியுரிமை மீளவும் வழங்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர்.

டக்கு- கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஈ.பி.ஆர்.எல்.எப் பத்மநாப அணியின் முக்கியஸ்தருமான அ.வரதராஜப்பெருமாளுக்கு இலங்கைக் குடியுரிமை மீளவும் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தேர்தலில் போட்டியிடக் கூடிய வகையில் நேற்று(07) அவருக்குக் குடியுரிமை வழங்கப்பட்டது என அறிய முடிகின்றது.

கடந்த ஆண்டு அவர், இலங்கைக் குடியுரிமைக்கு விண்ணப்பித்தபோதும் அது நிராகரிக்கப்பட்டது.இந்த நிலையிலேயே தற்போது வரதராஜப்பெருமாளுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பின் 13ஆம் திருத்தின் பின்னர் வந்த இணைந்த வடக்கு - கிழக்கின் முதலாவது முதலமைச்சராக அவர் பதவி வகித்தார்.

எனினும் 13ஆவது திருத்தத்தை தீர்வாக ஏற்க தமிழீழ விடுதலைப் புலிகள், சுயாட்சி அதிகாரங்களைக் கேட்டனர்.

அதனால் ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து முதலமைச்சர் பதவியைத் துறந்த வரதராஜப்பெருமாள், இந்தியாவில் தஞ்சமடைந்தார்.

போர் நிறைவடைந்ததையடுத்து இந்தியாவிலிருந்து சுற்றுலா நுழைவு விசாவில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து சென்ற வரதராஜப்பெருமாளுக்கு நேற்று(07) இலங்கைக் குடியுரிமை மீள வழங்கப்பட்டது.IBC
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -