.பருவப்பெயர்சி காலநிலைக்கு முகம்கொடுத்தலும், அனர்த்த நிவாரண சேவைக்கு முன்னாயத்தம் செய்தலும் தொடர்பான செயலமர்வு






எஸ் .எல். அப்துல் அஸீஸ்-

2017ஆம் ஆண்டின் வட கிழக்கு பருவப்பெயர்சி காலநிலைக்கு முகம்கொடுத்தலும், அனர்த்த நிவாரண சேவைக்கு முன்னாயத்தம் செய்தலும் தொடர்பான செயலமர்வும், கலந்துரையாடலும் கல்முனை பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.


கல்முனை பிராந்தியத்தில் உள்ள அரச அமைப்புகளின் நிர்வாக பிரதிநிதிகள் கலந்துகொண்ட இந்த செயலமர்வில் இவ் ஆண்டின் பருவப்பெயர்சி காலநிலை தொடர்பாகவும், அதனால் தக்கம்கள் ஏற்பட்டாள் அதற்கு முன்னாயத்தத்தோடு எவ்வாறு பதிலளிப்பது, அனர்த்த நிவாரண சேவையை எவ்வாறு முன்னெடுப்பது போன்ற விடயம்கள் தொடர்பாக அறிவூட்டப்பட்டு கலந்தாலோசிக்கப்பட்டது.


கல்முனை பிரதேச அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர் ஏ.ஆர்.ஏ. நபாயிஸ்யினது இணைப்பிலும், பிரதேச செயலாளர் எம்.எச்.முகமட் ஹனி தலைமையிலும் இடம்பெற்ற இன் நிகழ்வில் அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி இணைப்பாளர் ஏ.சி.வாஹிர் உட்பட அரச அமைப்புகளின் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -