என்னை அதிகாரத்திற்கு கொண்டு வர வேண்டி தேவை எனது தந்தைக்கு இல்லை ; நாமல் ராஜபக்‌ஷ

ன்னை அதிகாரத்திற்கு கொண்டு வர வேண்டி தேவை தனது தந்தையும், முன்னாள்ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷவுக்கு இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாமல் ராஜபக்ஷவை 2025ஆம் ஆண்டு அதிகாரத்திற்கு கொண்டுவருவதுக்காகவே மஹிந்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை அழிப்பதற்கானசெயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பீ.திசாநாயக்க அண்மையில்தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் முகமாகவே நாமல் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவிக்கையில்,

“ என்னை அதிகாரத்திற்கு கொண்டு வருவதற்கு மஹிந்தவுக்கு எவ்வித தேவையும்இல்லை என்பதை முதலில் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.நான் போகும் பாதையைவிதி தீர்மானிக்கும்.நான் அரசியலில் நீடித்து இருக்கத் தான்போகின்றேன்.எஸ்.பீ.திசாநாயக்க போன்றவர்கள் பல வருடங்களாக அரசியலில்ஈடுபட்டுள்ள சிரேஸ்ட அமைச்சர். எனவே அவரது அரசியல் பற்றி மக்களுக்கு நன்றாகவேதெரியும் என்ற போதிலும்,அவ்வாறானவர்களின் இந்தக் கருத்து முக்கியமான ஒன்றல்ல”என நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -