கிண்ணியா நகர சபையில் பொதுமக்கள் சேவை மேம்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல்


ஹஸ்பர் ஏ ஹலீம்-

கிண்ணியா நகர சபையின் செயலாளரும், விஷேட ஆணையாளருமாகிய என். எம். நௌபீஸ் தலைமையில் நேற்று(18) அலுவலக உத்தியோகத்தர்கள் ஊழியர்களுடன் பொது மக்களின் சேவை மேம்பாடு தொடர்பான கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது. இதில் நிர்வாக உத்தியோகத்தர் பாயிஸ் உட்பட உத்தியோகத்தர், ஊழியர்களும் கலந்து கொண்டனர். மக்களுக்கான சேவைகளின் உற்பத்தி திறனையும், அலுவலகத்தின் உற்பத்தி திறனையும் அதிகரிக்கும் நோக்கில் பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

1. பொது மக்களுக்கு சேவை வழங்கும் நோக்குடன் அலுவலகம் ஒழுங்கமைப்பு செய்தல்..

2. சேவைகளில் வினைத்திறனை அதிகரிக்கும் நோக்கில் உற்பத்தி திறன் செயற்பாடுகளை ஆரம்பித்தல்.

3. பொது மக்களின் சேவையை அதிகரித்து இலகுவான சேவைகளைப் பெற்றுக் கொள்ளும் நோக்குடன் வரவேற்பறையும், போதிய இருக்கை வசதிகளையும் ஏற்படுத்தல்.

4. அத்துடன் பொதுமக்கள் நலன்கருதி தண்ணீர், மலசல கூட வசதிகளை ஏற்படுத்தல்.

5. பொதுமக்களிடமிருந்து வரும் முறைப்பாடுகளை பதிவு செய்து உரிய உத்தியோகத்தருக்கு அறிவித்தல்.

6. பொதுமக்களிடம் இருந்து ஆலோசணை பெறும் விதத்தில் ஆலோசணைப் பெட்டி அமைத்தல்

7. அலுவலகத்தின் ஒழுங்கமைப்பினை மக்கள் இலகுவாக சேவை பெறுவதற்கேற்ப மாற்றியமைத்தல்.

8. மூன்று மொழிகளிலும் பெயர்ப்பலகைகள் இடல்.

9. அலுவலர்களுக்கும், பொதுமக்களுக்குமான வாகனத் தரிப்பிடங்களை ஒழுங்கமைத்தல்.

10. அலுவலக முன் பகுதியை அழகுபத்துவதும், தோட்டங்கள் அமைத்தலும்.

11. வெளிப்படைத்தன்மை பேனும் நோக்கில் ஒவ்வொரு பிரிவிலும் நகரசபையின் செயற்றிட்டம் தொடர்பான முக்கிய விடயங்களைக் காட்சிப்படுத்தல்.

12. நிர்வாகத் தேவைக்கேற்ப ஒவ்வொரு உத்தியோகத்தருக்கும் அவரவர் பதவிக்கேற்ப கிளைகள் மாற்றப்பட்டதுடன் சேவை நோக்குடனான கடமைகளும் வழங்கப்பட்டது.

13. வளங்கள் வீண் விரயமாவதைத் தடுத்தல், மீள் பயன்பாடுகளை மேற்கொள்வதன் மூலம் அரச வளங்கள் விரயமாதலைத் தடுத்தல்.

14. சகல விடயங்களும் சரியாக ஆரம்பிக்கப்பட்டு செயற்படுவதனை உறுதிப்படுத்தப்படுவதற்கான மேற்பார்வைக் குழு ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

15. வருகின்ற எந்த பொதுமக்களும் சேவை பெற்றே திரும்ப வேண்டும் என்பதுடன், அவ்வாறு உடனடி சேவை வழங்க முடியாதவிடத்து செயலாளருக்கு அறிவித்தல்.

போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதுடன் வெளிப்படையானதும், திருப்திகரமானதுமான சேவைகளை வழங்க அனைவரும் சேர்ந்து செயற்பட வேண்டும் என அனைத்து ஊழியர்களிடமும், உத்தியோகத்தர்களிடமும் செயலாளரினால் கேட்டுக் கொள்ளப்பட்டது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -