அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேட்பு மனுக்கள் அனைத்தையும் நிராகரிக்க கோரி உயர் நீதிமன்றில் வழக்கு..!

கில இலங்கை மக்கள் காங்கிரசின் செயலாளராக உள்ளூராட்சித் தேர்தல் நடவடிக்கைகளுக்காக எஸ். சுபைர்டீன் என்பவருக்கு செயற்பட தேர்தல் ஆணைக்குழு அனுமதி வழங்கியதற்கெதிராக இன்று (20/12/17) வை எல் எஸ் ஹமீட் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.


வழக்கு இலக்கம் 6/2017.

இதில் திரு எஸ். சுபைர்தீனால் கையொப்பமிடப்பட்டு சமர்ப்பிக்கப்படுகின்ற அ இ ம காங்கிரஸ் சார்பான தேர்தல் நியமனப்பத்திரங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கெதிராக அல்லது அவ்வாறு ஏற்றுக் கொள்ளப்பட்டால் அதனை நிரகரிப்பதற்கான இடைக்கால உத்தரவு, மற்றும் தேர்தல் ஆணைக்குழு வின் உத்தரவுக்கெதிராக தற்காலிக தடை உத்தரவு, மற்றும் நிரந்தர உத்தரவு போன்றவை கோரப்பட்டுள்ளன.

தற்போது நீதிமன்றம் விடுமுறையில் இருப்பதால் சம்மந்தப்பட்ட பிரதிவாதிகளுக்கு வை எல் எஸ் ஹமீட்டின் சட்டத்தரணியினால் அறிவித்தல் ( Notice) அனுப்பப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -