மு.இராமச்சந்திரன்,க.கிஷாந்தன்-
சிவனொளிபாதமலைக்கு கஞ்சா கொண்டு சென்ற நால்வரை அட்டன் கலால் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
புசல்லாவையிலிருந்து சிவனொளிபாதமலைக்கு வேண் ஒன்றி சென்ற 22 வயதுடைய இளைஞர்களே 03.12.2017 மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
அட்டன் கொழும்பு பிரதான வீதியின் நோட்டன் தியகல சந்தியின் பொலிஸ் சோதனை சாவடியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே 750 கிராம் கஞ்சா போதை பொருளுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நால்லவரையும் 04.12.2017 அட்டன் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜபடுத்த உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

