கள்ள நோட்டுக்களுடன் இருவர் கைது..!

அப்துல்சலாம் யாசீம்-

திருகோணமலை இறக்கக்கண்டி பகுதியில் ஆயிரம் ருபாய் கள்ள நோட்டுக்களுடன் இரண்டு பேரை நேற்று (01) மாலை கைது செய்துள்ளதாக திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி எஸ்.ஐ.ஐனுஷன் தெரிவித்தார்.

நிலாவெளி கடற்படையினர் வழங்கிய இரகசிய தகவலையடுத்து இறக்கக்கண்டியில் சந்தேக நபரை சோதனையிட்ட போது ஆயிரம் ருபாய் கள்ள நோட்டு கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் இறக்கக்கண்டி.வாழையூற்று பகுதியைச்சேர்ந்த எம்.பீ.றிஷாத் (29வயது) மற்றும் ஏ.எச்.றிஸ்வான் (29வயது) எனவும் தெரியவருகின்றது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இரண்டு பேரையும் குச்சவெளி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகவும் இன்றைய தினம் திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஐர்படுத்தவுள்ளதாகவும் குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -