முதியவரை அடையாளம் காண உதவுங்கள்...!

பாறுக் ஷிஹான்-

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவரை அடையாளம் காண உதவுமாறு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகம் கேட்டுள்ளது.

"60 வயது மதிக்கத்தக்க முதியவர் கடந்த 25ஆம் திகதி சனிக்கிழமையன்று கைதடி வைத்தியசாலையில் இருந்து காலை 10 மணியளவில் யாழ்.போதனா வைத்தியசாலை விடுதி இலக்கம் 24 இற்கு சேர்க்கப்பட்டார். இடது காலில் இவருக்குக் காயம் உள்ளது. தற்போது விடுதி இலக்கம் 29இல் சிகிச்சை பெற்று வருகின்றார். 

முதியவர் மூலம் எதுவித தகவல்களும் பெற்றுக் கொள்ள முடியாமல் இருப்பதனால் யாராவது இவர் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் யாழ். போதனா வைத்தியசாலை விடுதி இல. 29 நிர்வாகத்துடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்" என்று யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

உங்கள் பக்கம் செயார் செய்து இந்த முதியவரை அடையாளம் காண உதவுங்கள்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -