முல்லைத்தீவு கடற்பரப்பில் மாற்றங்களை அவதானிக்க முடிவதாக கரையோரப் பகுதி மக்கள் குறிப்பிட்டனர்.
கடற்பரப்பின் நீரோட்டத்தில் வித்தியாசம் தென்படுவதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, அச்சம் காரணமாக முல்லைத்தீவு நகர்ப்புறம், கள்ளப்பாடு, சிலாவத்தை, தீர்த்தக்கரை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள், இரவு வேளையில் முள்ளியவளை பகுதியில் இருக்கும் உறவினர்களின் வீடுகளுக்குச் சென்று தங்கிவிட்டு காலையில் தமது வீடுகளுக்கு திரும்புகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் சுனாமி குறித்து தகவல்கள் பகிரப்படுவதால் தாம் அவ்வாறு செய்வதாக மக்கள் கூறினர்.
எவ்வாறாயினும், கடலின் மாற்றம் சுனாமிக்கான அறிகுறி இல்லை எனவும் மழைக்காலங்களில் இவ்வாறான நிலை ஏற்படும் எனவும் கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்தின் பணிப்பாளர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -