யானையின் தாக்குதலினால் மாமாவும் மருமகனும் படுகாயம்

அப்துல்சலாம் யாசீம்-

தி
ருகோணமலை மஹதிவுல்வெவ பகுதியில் மாமாவும் மருமகனும் சேனைக்கு சென்று வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருக்கும் வேளை யானையின் தாக்குதலினால் படுகாயமடைந்த நிலையில் இன்று (05) அதிகாலை திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மஹதிவுல்வெவ விகாரகம பகுதியில் சேனைப்பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு வரும் இவர்கள் வீட்டுக்கு வருகை தரும் வழியில் யானை தாக்கியதாகவும் அதனால் மாமாவும் மருமகனும் படுகாயமடைந்த நிலையில் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்ததாகவும் தெரியவருகின்றது.

இவ்வாறு படுகாயமடைந்தவர்கள் மஹதிவுல்வெவ-புபுதுபுர பகுதியைச்சேர்ந்த எச்.எம்.கிரிபண்டா (60வயது) மற்றும் அவரது மருமகனான கே.அபேரத்ன (32வயது) எனவும் தெரியவருகின்றது.

யானையின் தாக்குதலினால் மாமாவின் கால் உடைந்துள்ளதுடன் அவரை சத்திர சிகிச்சைக்கு உற்படுத்தவுள்ளதாகவும் அதிதீவிர சிகிச்சைப்பிரிவின் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இதேவேளை காட்டு யானையின் அட்டகாசம் அதிகரித்து வருவதினால் யானை மின்வேலிகளை அமைத்து தருமாறும் மஹதிவுல்வெவ பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -