பஸ் விபத்து - 03 பேர் படுங்காயம்



க.கிஷாந்தன்-

வெலிமடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பதுளை – வெலிமடை பிரதான வீதியின் வெலிமடை வேல்லேவெல பிரதேசத்தில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 03 பேர் காயமடைந்துள்ளதாக வெலிமடை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து 03.12.2017 அன்று காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மஹியாங்கனையிலிருந்து வெலிமடையில் நிகழ்வு ஒன்றுக்கு பயணிகளை ஏற்றிச் சென்று இறக்கி விட்டு மீண்டும் வெலிமடையிலிருந்து மஹியாங்கனை நோக்கிப் பயணித்த போது வீதியை விட்டு விலகி குடைசாய்ந்ததினால் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

விபத்தில் பஸ் சாரதி உட்பட 03 பேர் காயமடைந்த நிலையில், வெலிமடை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிமடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -