முகத்துவாரத்தை வெட்டவிடாமல் குரோதம் காட்டும் ஆலயடிவேம்பு DS




 எஸ்.எம்.சபீஸ்-

லதினங்களாக பெய்துவரும் மழை காரணமாக அக்கரைப்பற்றில் பல வீடுகள் நீரில்மூழ்கிப்போனது, இதற்கு முக்கிய காரணம் முகத்துவாரம் தடைப்பட்டுள்ளமையாகும்.

காலாகாலம் வெள்ளம் வந்தால் முகத்துவாரத்தை வெட்டி துப்பரவு செய்வது வழமை ஆனால் அறிவில்கூடிய ஆலயடிவேம்பு பிரதேச செயலாளர் இப்பணிக்கு தடையாக நிற்கின்றார் காரணம் அப்பிரதேசம் அவரது ஆளுகைக்குட்பட்டிருப்பதலாகும்.

நேற்று அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் தொலைபேசியினூடாக ஆலயடிவேம்பு பிரதேச செயலாளரை தொடர்பு கொண்டதன் பிற்பாடு அக்கரைப்பற்று மாநகர ஆணையாளர் பொறியியலாளர் மற்றும் தொழிலாளர்கள் உட்பட வாகனகளும் சென்று துப்பரவு பணியை ஆரம்பிக்கும்போது திடிரனே துப்பரவு பணிகளில் ஈடுபடவேண்டாம் என ஆலயடிவேம்பு DS மாநகர ஆணையாளரை வேண்டிக்கொண்டார்.

ஆணையாளர் அக்கரைப்பற்று மக்களின் வீடுகள் நீரில் மூழ்கியுள்ளது முகத்துவாரத்தை வெட்டி அகழாவிட்டால் இன்னும் நிலமை மோசமாகும் மழைக்காலம் வேற ஆரம்பமாகியுள்ளது என்று மன்றாட்டமாக கோறியும் செவிசாய்க மறுத்தார் ஆலையடி வேம்பு DS ஜெகதீசன்.

இவர் கற்றறிந்தவர் இருந்தும் முஸ்லிம் மக்கள்தானே கொஞ்சம் கஷ்ரப்பட்டால் என்ன என்று நினைத்தாரோ தெரியாது.

உலகத்தில் அதிபுத்திகூடியது செய்த்தான்தான் அதனை எவ்வாறு விரட்டவேண்டும் எனபதை கற்றுக்கொண்டவர்கள் எமது மக்கள் என்பது விரைவில் அவருக்கு புரியும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -